Skip to main content

Posts

Showing posts from December, 2010

ஐயோ பாம்பூ!

மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே கணினியின் சித்து விளையாட்டுப் புரிந்துவிடும். இப்படித் தான் சமீப காலமாக இலங்கையில், அதுவும் வட மாகாணத்திலே இது போன்ற மாய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பொக்கணைப் பகுதியில் பிடிபட்டதாகச் சொல்லி, photoshop மூலமோ அன்றி வேறு software  மூலமாகவோ வடிவமைக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட்டது. கீளே உள்ள படத்தைப் பார்க்கவும். நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் உள்ள சூட்சுமங்கள் தெரிந்துவிடும். அட அட, என்ன அழகாக போட்டோவிற்குப் போஸ் கொடுக்கிறது பாருங்கள். “ என்னை அழகாகக் கிளிக் செய். நானுனக்கு வைரம் தருகிறேன்” என்று பாம்பு சொல்லியிருக்குமோ? இப்படம் பொய்யானது என்பதற்கான காரணங்கள் : * இப்படத்தில் காணப்படும் பாம்பின் நிழல் ஒருதலைப் பாம்பிற்குரியது.  (ஒருதலைப் பாம்பின் படத்தை எடிட் செய்திருக்கிறார்கள்) *  இப்படம் (ஒரு தலைப் பாம்பு) தேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் என்பது அதன் தரத்திலேயே தெரிகின்றது.(இந்தப் பதிவில் இப்படத்தை இணைக்கும் போது அதன் தரம் சற்றுக் குறைந்து விட்டது ) டிஸ்கவரி நிகழ்ச்சிகளிலெல்லாம் பார்த்திருப்

மனதில் பட்டவை

எ துவும் நடக்கவில்லையே என்கிற யோசனையில் அதிகம் நகம் கடிப்பவரா நீங்கள்.? அப்படியாயின் நல்லது. நீங்கள் ஒன்றும் வீண் பொழுது போக்கவில்லை. உங்கள் நகத்தைச் சுத்தமாக்குவதில் நேரத்தை முதலிடுகிறீர்கள் என்று அர்த்தம்! ................................................................................................................................................................ ந ண்பர்கள் மேல் கோவமா? அவர்கள் கண்கள் பார்த்து, மௌனமாகத் திட்டுங்கள். நண்பர்களைப் பாராட்ட வேண்டுமா? நண்பனைத் தவிர மற்ற வர்களிடம் அவனைப் பற்றி சத்தமாகப் பாராட்டுங்கள்! ................................................................................................................................................................ உ லகமே நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்கிறார்கள். எனக்குத் தரப்பட்டது மோசமான கதாபாத்திரமோ என்னவோ! ................................................................................................................................................................ பெ ண்கள் பூக்களின் இதழ்க

ஹலோ டயரி - 2

பாங்கும் வேலையும் : பாங்கில் வேலை செய்பவர்கள் என்றவுடன் இந்த சமூகத்தால், ஏனென்றே தெரியாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சதா பணத்துடன் புழங்குகின்றார்கள் என்றோ அல்லது முற்றிலும் குளிரூட்டப்பட்டு, அழகுபடுத்தப் பட்ட அந்த விசாலமான அறையில் தங்களை வரிசையில் காக்க வைத்து கீபோர்ட்டில் என்னமாய் கிளிக்கு கிறார்களே என்ற பிரமிப்பிலோ தெரியாது. உண்மையில் அதற்குப் பின்னுள்ள சூட்சுமங்கள் பலருக்குத் தெரிவதில்லை. இப்படித்தான் தனியார் வங்கியொன்றின் தமிழ் பிரதேசக் கிளையின் பதவி ஒன்றிற்கு விண்ணப்பித்து, அவர்களின் அழைப்பின் பேரில் நேர்முகப் பரீட்சைக்குப் போய் இருந்தேன். ஆங்கில மொழியில் எழுத்துப் பரீட்சை வைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் நால்வரை அடுத்த கட்டத்திற்குத் தெரிவு செய்தார்கள். அடுத்த கட்டமென்பது ஒரு கண்னாடி அறைக்குள், தலை விரி கோலமாய் இருக்கும் வயதான பெண்மணி, தேவைக்கும் அதிகமாய் சிரித்தபடி, ஆங்கிலத்தில் அபத்தமாக கேள்விகள் கேட்பார், கேட்டார். முடிவுகளை அறிந்து கொள்ள மாலை வரச் சொன்னார்கள். சென்றேன். என்னைத் தெரிவு செய்ய வில்லை என்றார்கள். காரணம் கேட்டேன். சொல்ல மற

ஹலோ டயரி - 1

I am back : இரண்டு மாதங்களின் பின்னரான என் முதல் பதிவு இது. திரும்பத் திரும்பக் காதலையும், கவிதையையும் மட்டுமே எழுதி எழுதி , போரடித்து விட்டது. ஆங்கிலத்தில் சொல்வார்கள் “here  and there"  அதுபோல போனால் போகுது என்று , இரண்டு அல்லது மூன்று பேர் தினமும் என் வலைப் பதிவுக்கு வந்து போவார்கள். அவர்களை கொஞ்ச நாளைக்கேனும் எதுவித காயங்களோ அன்றி சேதாரங்களோ இன்றி இருக்கவைக்க வேண்டுமென்று கட்டாய ஓய்வெடுத்துக் கொண்டேன்.   இதோ இப்போது வந்துவிட்டேன்! Get ready for அறுவை! முன் கதைச் சுருக்கம் ( கொஞ்சம் serious ஆக ) : கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கவிதை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக எழுதுகிறேனா இல்லையா என்று தெரியாமலேயே எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். கவிதையின் மேல் அப்படியொரு காதல். அதில் பல மன நிறைவைத் தந்திருக்கின்றன. பெற்ற குழந்தையை முதல் தடவையாக எதிர்பார்ப்புடனும், வாஞ்சையுடனும் பார்க்கும் தாயைப் போலத்தான் நானும் கவிதைகளைப் பார்த்திருக்கிறேன். எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அது 1999ம் ஆண்டு. எனது முதல் கவிதை வானொலியில் ஒலிபரப்பப் பட்ட ஆண்டு. அப்போது லோக்ஷன் அண்ணா ச