எனக்கருகில்
ஏகப்பட்ட மனிதர்கள்.
இருந்தும்,
இதயத்திற்கருகில்
உன்னுடன் சேர்த்து
ஒருசிலரே .....
உன்னை விட
யாராலும்
இவ்வளவு கச்சிதமாக
சுழற்றிப்போட முடியாது
காதல் எனும்
கடினப்பந்தை.
யாராலும்
இவ்வளவு கச்சிதமாக
சுழற்றிப்போட முடியாது
காதல் எனும்
கடினப்பந்தை.
கடித்துக் குதறுமாம்
வேங்கை.
பதுங்கியிருந்து
கழுத்தில் பாய்ந்து
நரம்புகள் வெடிக்க
பற்களைப் பாய்ச்சி
இரசித்துச் செய்யும்
தன் உணவின்
கொலையை.
சிரித்துக் கொண்டே
சொல்கிறேன்.....
காதலும்
அதைத்தானே செய்கிறது.
எங்கே என்று
பார்த்து விட்டு,
உன் வார்த்தைகளுக்கு
இடையில் ஒட்டிக்கொண்ட
மௌனத்தில்
தன் சாமர்த்தியத்தை
காட்டிவிட்டு,
ஓய்வு நாற்காலியில் போய்
உட்கார்ந்து
கொல்கிறது காதல்!
.
.
.
வார்த்தைகளுக்கு
ReplyDeleteஇடையில் ஒட்டிக்கொண்ட
மௌனத்தில்
தன் சாமர்த்தியத்தை
காட்டிவிட்டு,
ஓய்வு நாற்காலியில் போய்
உட்கார்ந்து
கொல்கிறது காதல்!
Superb,
Thanks, RIPHNAS MOHAMED.
ReplyDelete