Skip to main content

Posts

Showing posts from November, 2011

காதல் படிக்கட்டில்

(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... ) ஆண் குரலில் : காதல் படிக்கட்டில் நான் கடைசியில் நிற்கின்றேன். என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே! கவனிக்க மாட்டாயா? என் கண்களைப் பாரம்மா. இந்தக் கவிதையைக் கேளம்மா... காதல் என்றால் கொடுமையல்ல புரிந்து கொள்ளம்மா. வகுப்புக்கு நீ வருவாய். என்னை விட்டு  தூரத்தில் போய் அமர்வாய். இந்த இடைவெளி அளவு குறையாவிட்டால் கணிதமும் கசந்துவிடும். மலர்களை விரும்புகிறாய் அதை முள்ளுடன் பறிக்கின்றாய். முள் நான், மலர் நீ சேர்ந்தே இருக்கணும் விளங்கிக் கொள்வாயா? இந்தக் காதல் தவிக்கும்படி உன் கண்களும் பழிக்குதடி. நிலவொளி என்பது முற்றத்தில் விழுவது கால்கள் மிதிப்பதற்கா?. என் கூடவே வருகின்றாய். பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய். அதில் என் பெயர் கேட்டதும்  உன் முகம் சிவந்ததை  என்னிடம் மறைக்காதே! அடி வெல்வெட் துணித்துண்டே! என்னை வெறுப்பதாய் நடிக்காதே! உன் உதடுகள் சொல்வதும் இதயம் நினைப்பதும் நிச்சயம் ஒன்றல்ல. உன் கைவிரல் அணைப்பிற்குள் தங்க மோதிரம் துயில்கிறதே... அதில் உன் பெயர், என் பெயர் உற்பத்தி

ஒரு தபுதாரனின் தவிப்பு

என்ன இந்த வாழ்க்கை  ஏன் இப்படிக்கொல்கிறதோ... காதலித்த மனைவியை  காலனிடம் இழந்தவர்களுக்கு  வெற்றுச் சுவரை விட வேறு மார்க்கமேயில்லையா? வேலை விட்டால் வீடு வீடு விட்டால் வேலை என்று சுருங்கிவிட்ட  வாழ்க்கை. நீ அதிகம் விரும்பிய மழையையோ, மலர்களையோ கடற்கரையையோ, காதல்பாடல்களையோ  அனுமதிக்காத வாழ்க்கை. வேலை நேரம் கழிந்து எஞ்சிய வாழ்க்கையை வீடு முழுக்க விரவியிருக்கும் உன் அடையாளங்களும் அவை கொண்ட  நினைவுகளும் தின்கின்றன! சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ இன்னும் மோசம் இன்னும் மோசம்! காலையில் தரையிலிருந்து என்னை எழுப்பிவிட்டு, குளிக்கும் போதும்,  குடிக்கும் போதும், சமைக்கும் போதும்,  சாப்பிடும் போதும், துவைக்கும் போதும்,  உலர்த்தும் போதும்,  படிக்கும் போதும்,  சுவரை வெறித்துப்பார்க்கும் போதும் கூடவே இருந்துவிட்டு... பிந்திய இரவில் தவறாமல் கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை. நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில்,  ஆசையாய் மீட்டும் வயலின், நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள், மௌனத்தைப் பேசும்  உன் சோடிக்கொலுசுகள், காதல் சொட்டச் சொட்ட அனுபவித்து வாழ்ந்த நம் அந்தரங்க அறைய

தலைவன்

வசந்தம் வருகிறது போகிறது... வரட்சி வருகிறது போகிறது... தலைவன் வருகிறான் போகிறான் ... எப்போதும் போலவே மக்கள் - சிரித்து அழுது புசித்து புணர்ந்து ... வாழ்கிறார்கள். அவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை அவரவர் பசியின் அளவே தீர்மானிக்கிறது. ஆம் மக்கள் வெறும் மக்கள் தான்! . .

கவிதையல்ல!

உத்தரத்தில் தொங்கும் பித்தளை வேலைப்பாட்டில் மயங்குகின்றோம். கீழே மிதிபடும் வைரங்களைக் கவனிப்பதில்லை... * இந்த உலகம் - அழகானவர்களையே எப்போதும் ஆராதிக்கின்றது. அவர்களின் மனங்களின் அழுக்குகள்  மறைக்கப்படுவதால்... அழுக்கானவர்களையோ எப்போதும் அவமதிக்கின்றது. அவர்களின் மனங்களின் அழகுகளை மறந்துவிடுவதால்! * வாழ்க்கை - செதுக்கி வைக்கப்பட்டதென்று யார் சொன்னது? அது ஒரு  அமைப்பற்ற கூழாங்கல். அதை அழகூட்ட முயற்சித்தல் அபாயம் தரும்! . .

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எப்போதும்

உயிருக்குள் நனைகிறேன்

: ஆண்    இளந்தேனையும் பாலையும்  கலந்து செய்துவைத்த  சிலை நீயோ? இதமாக இதமாக   என் காதில் இனித்திடும் இசை நீயோ? * காதலின் தூறலில்         உன் கண்களின் ஈர்ப்பினில்         விரல்களின் ஸ்பரிசத்தில்           உயிருக்குள் நனைகிறேன். : பெண்      காதலின் தூறலில்         உன் கவிதையின் ஈர்ப்பினில்         ஆண்மையின் ஸ்பரிசத்தில்         உயிருக்குள் கரைகிறேன். *  : ஆண்  உன்னைப் பார்க்கையில்      ஏனடி என் நெஞ்சில்   இத்தனை படபடப்பு? உன்னோடு பேசையில்         ஏனடி என் உயிருக்குள்    இந்த சல சலப்பு? * : பெண்        அருகினில் இருக்கிறாய்         அவஸ்தைகள் செய்கிறாய்         என்னையே பார்க்கிறாய்         ஏதோ கேட்கிறாய். : குழு  அருகினில் இருக்கிறாய்... இருக்கிறாய்... இருக்கிறாய்.         அவஸ்தைகள் செய்கிறாய்... செய்கிறாய்...செய்கிறாய்.         அவளையே பார்க்கிறாய்         என்ன தான் கேட்கிறாய். * : ஆண் அதை நான் சொல்லவா? அதை நான் சொல்லவா?       சொல்லாமல் செல்லவா?  சொல்லாமல்

ஹைக்கூவும் விளக்கமும்

நான் எழுதிய சில ஹைக்கூக்களிற்கான விளக்கங்களை என்னுடைய கோணத்திலிருந்து தர முயற்சிக்கின்றேன். எங்கே வேண்டுமானாலும் தோன்றலாம் ஹைக்கூ. முற்றத்தில், சாலையில், பூங்காவில்,கடற்கரையில், சினிமாவில், காதலியின் மடியில் ... இப்படி எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு ஹைக்கூவிற்கு இதுதான் சரியான விளக்கம் என்று எதுவும் அமைந்து விடாது. வாசிக்கும் நபர், அவருடைய மனநிலை, அவருடைய வாழ்க்கைச் சூழ்நிலை என்பவற்றைப் பொறுத்து ஒரு ஹைக்கூவினுடைய விளக்கமும் மாறுபடக் கூடியதாக அமையும். நான் தரும் விளக்கத்தில் இன்னொருவருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் அல்லது திருப்திதராமல் விடலாம்; திருப்தி தராது விட்டால் நல்லது. ஹைக்கூவின் தனித் தன்மையே அதுதானே! 1. கிணற்றைப்போல் தொட்டிக்குள்ளும் நிலவு. விளக்கம் : அது பௌர்ணமி நிலவு தோன்றும் இன்னுமொரு பிரகாச இரவு. கிணற்றருகில் நின்றுகொண்டு வானம் பார்க்கிறேன். அடடா! என்ன அழகு. அந்த அழகியை தன் அருகினில் வைத்துக் கொள்ள, முப்பது நாட்களாய் வானம் தவமிருப்பது, நிச்சயம் தப்பில்லை. இயல்பாக கிணற்றுக்குள் பார்க்கிறேன், அங்கேயும் நிலவு இன்னும் அழகாய். அருகிலிருக்கும் தொட்டிக்கு

என் முற்றத்துக் கவிதைகள் - 2

ஹைக்கூ பகுதி - 2 அனைவரையும் வரவேற்கின்றது. ஹைக்கூ பகுதி - 1 ற்கு இங்கே சொடுக்கவும்.  http://theruppaadakan.blogspot.com/2011/11/blog-post_07.html   .  ஹைக்கூ என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியது. ஏதோ வாசிக்க வேண்டும் என்றெல்லாம் வாசிக்கக்கூடாது. அப்படி வாசித்தால், வெறும் வார்த்தைகளாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும், எதுவும் புரியாது. ஹைக்கூவை மனதால் வாசிக்க வேண்டும். உண்மையில் ஹைக்கூ என்பது பூந்தோட்டத்தில் வீசும் மெல்லிய, இதமான சில்லென்ற காற்றை சுவாசிப்பதைப் போல சுகமான ஒரு அனுபவம். அதனை மெதுவாக, ரசித்துச் சுவைக்கும் போதுதான் அதன் வசீகரத் தன்மையை உணர முடியும்.  தவறாமல்  தோற்கடிக்கிறது எல்லோரையும்  வயிறு. ** தாய்ப்பாலை விற்றாள். குழந்தைக்கு உணவு. ** இரவிலும் குளிக்கின்றாள் முதிர்க்கன்னி. ** விளக்கைப் பற்றவைத்தாள். கட்டுமரத்தின் அசைவு. ** கால மாற்றம். பேரூந்தில் ஜன்னல் தவிர்த்தது. ** கலைந்தது வானம். கிணற்றுக்குள்  வாளி. ** பூனைப் படத்தை கொறித்துப்போட்டது எலி. ** பேசும் பொம்மை வைத்திருந்தான் ஊமைப்பை

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி