ஆண் குரல் :
வரமாய் வந்த
தேவதை
நீ குறும்புகள் செய்யும்
தாமரை!
ஈடன் தோட்டத்துப்
பொன்வண்டு
நீ இதயத்தை அரிக்கும்
சில் வண்டு!
கனவுகள் வரைந்த
ஓவியம்
நீ கவிஞர்கள் படைத்த
காவியம்!
மொட்டுக்கள் விழித்து
மலராகும்
உன் கூந்தலின் மென்மையை
களவாடும்!
**
வரமாய் வந்த
தேவதை
நீ குறும்புகள் செய்யும்
தாமரை!
ஈடன் தோட்டத்து
பொன்வண்டு
நீ இதயத்தில் இனிக்கும்
கற்கண்டு!
**
உன் உதட்டினில் பிறப்பது
சிறு கவிதை
அது உடனே மறைவது
பெருங்கவலை!
இரவுகள் வருவது
எதற்காக?
உன்னால் பௌர்ணமி தோற்கணும்
அதற்காக!
**
வரமாய் வந்த
தேவதை
நீ குறும்புகள் செய்யும்
தாமரை!
ஈடன் தோட்டத்து
பொன்வண்டே
உன் இதயத்தில் எனக்கொரு
இடமுண்டா!
**
நதிக்குள் குதித்தது
நீர்வீழ்ச்சி
அதன் காதல் தோல்விக்கு
நான் சாட்சி!
உன்னருகால் உலகை
அழகாக்க
என் ஆயுள் முழுக்க
நீ வேண்டும்!
நீ வேண்டும்!
**
வரமாய் வந்த
தேவதை
நீ குறும்புகள் செய்யும்
தாமரை!
ஈடன் தோட்டத்து
பொன்வண்டே
உன் இதயத்தில் எப்போதும்
இடமுண்டே!
* * * * *
Comments
Post a Comment