Skip to main content

வெட்கத்துண்டை வீசியவள்!





எப்போது பார்த்தாலும், 
படித்தாலும்
மனசை கொள்ளை கொள்ளும்
தபூ சங்கரின் 
காதல் கவிதைகள் நீ!


வெனிஸ்வேலா நாட்டுக்காரியை
உலக அழகியாகத் தெரிந்தார்கள் -
உன்னைப் பார்க்காத
முட்டாள்கள்!


உன் விரலைப் பிரிந்த 
நகத்துண்டு,
உன்னை விட்டு உதிர்ந்த 
தலை முடி,
உன்னை விட்டுத் தவறிய 
கைக்குட்டை என
எதுவுமே என்னிடம் இல்லை!
உன்னை 
வேண்டாமென்று வெறுத்தவை 
எனக்கெதற்கு?


உனக்கான முக்கியத்துவத்தை
குறைத்து விடுவேனோ என்ற பயத்தில்,
நான் ஆசையாக எழுதிக்காட்டும்
கவிதைகளில் - நீ
ஆர்வம் காட்டமாட்டாய்.

உடனே எனக்குள் நினைத்துக் கொள்வேன் -
சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று
பொறாமைப் படுகிறதே என்று!


கூடுவிட்டுக் கூடுபாயும்
வித்தைக்காரன் நான்.
சமயங்களில் மாறிவிடுகிறேன்...
வர்ணக்குடுவை சுமந்துசெல்லும்
வண்ணத்துப்பூச்சியாய்,
உன் உதட்டுச் செம்பில்
நிறைந்து வழியும் புன்னகைப் பாலாய்,
உன் கண்களின் படபடப்புக்குள்
சிக்கிக் கொண்ட வெட்கத் துண்டாய்,
மஞ்சள் பூக்களாய்,
மலை நாட்டுச் சுடாத வெய்யிலாய்,
நதிகளை நனைக்கும்
சில்லென்ற மழையாய் 
சமயங்களில் மாறித்தான் விடுகிறேன்...
ஏனென்றால்,
இவற்றுக்கு மட்டும்தான்
உன் அனுமதியின்றி
எப்போது வேண்டுமானாலும்
உன்னை ஸ்பரிசித்துப் பார்க்கும்
சலுகையும் உள்ளது!


நீ வெள்ளைச் சுடிதாரில் 
வரும்போதெல்லாம் குழம்பிவிடுகிறேன்.....
உனக்கும் நிலவுக்கும் இடையில் 
6 ஒற்றுமைகளை காண்பதில் உள்ள 
இலகுத் தன்மையாலும்,
5 வேறுபாடுகளை காண்பதில் உள்ள
கடினத் தன்மையாலும்!


எனக்குப் பிடித்த பாடலை
மௌனமாக ரசிப்பேன்.
உனக்குப் பிடித்த பாடலின் வரிகளை
கவனமாக வாசிப்பேன்....
அதில் எங்கேனும்
என் பெயர் வருகிறதா என்று.


நல்ல நாள் பார்த்தே
உன் அப்பாவை சந்திக்கப் போகிறேன்.
உன்னைப் பெண் கேட்பதற்காக அல்ல.
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!


.
.



Comments

  1. @ தேனம்மை லெக்ஷ்மணன்.....
    Thanks mam.
    தங்களைப் போன்ற சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கும் எழுத்தாளரிடமிருந்து பாராட்டைப் பெறுவதை விட மிகச் சிறந்த பரிசு வேறு எதுவாக இருக்க முடியும்.

    -நன்றி-

    ReplyDelete
  2. @ விச்சு...
    வலைச்சரத்தில், ஆதலினால் காதல் செய்வீர் எனும் காதலர் தினச் சிறப்புப் பதிவில், என்னுடைய “வெட்கத்துண்டை வீசியவள்” கவிதையையும் இணைத்துக்கொண்டு, பலரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த நண்பர் விச்சுவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......

    ReplyDelete
  3. எக்செல் சிறப்பு மென்பொருள் அல்லது அச்சுப்பொறி இல்லாமல் காசோலை அச்சிடும்
    கடைசி இரு இரண்டாம் உலக கொடுத்ததை
    சில பயனுள்ள தகவல் மற்றும் நான் இங்கே உருவாக்கப்பட்ட எக்செல் திட்டத்தின் உள்ளன. இது சிறிய வணிக மற்றும் அலுவலக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இலவச இந்த அனைத்து பதிவிறக்க முடியும் மற்றும் உங்கள் வணிக ஏற்ப இந்த திட்டத்தை எந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நான் இலவச அதை செய்ய முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி