Skip to main content

Posts

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால் யார் தான் வா
Recent posts

அதிஷ்டம் -சிறுகதை

      திருக்கைலாயத்திலே இரவு நாடகங்களை முடித்துக் கொண்டு 52 இன்ச் டிவியை அனைத்துவிட்டு படுக்கைக்கு வந்த பார்வதி மிகவும் ஜோசனையில் இருந்த சிவனை பார்த்து "சுவாமி! என்ன பலத்த ஜோசனையில் இருக்கிறீர்களே என்ன விஷயம்" என கேட்டார். "அதொன்றும் இல்லை பாரும்மா, இவன் என்னுடைய அதீத பக்தன் சிவதாசன் இருக்கின்றானே அவன் மகாஜன சம்பத ஒன்றை வாங்கினான். சரி அவனும் கொஞ்சம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருக்கின்றான் தானே, அதனாலே அவனுக்கு சூப்பர் பரிசு 5 கோடி பணப்பரிசு விழும்படி செய்தேன். சந்தோசத்தில் துள்ளிக் குதித்த அவன், இரவு படத் தட்டிலிலே அவ் டிக்கட்டை வைத்து, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு விட்டு படுக்கச் சென்றான். காலை எழுந்து பார்த்த போது டிக்கட் தீப் பிடித்து முழுதுமாக எரிந்து விட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவன் என்னை படு மோசமாக திட்டித் தீர்த்து விட்டான். அது தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது" என்றார். அதற்கு பார்வதி" ஏன் நீங்கள் அந்த டிக்கட் எரிவதை தடுக்கவில்லை பிரபு ?" எனக் கேட்டார். நீண்ட பெருமூச்சொன்றை விட்ட படி சிவன் சொன்னார்" இவனுக்கு 5 கோடி

தமில் விறுது - சிறு கதை

இன்று ஆகஸ்ட் 10, 2030.  வறுடம் தோறும் நடைபெறும் அகில உலக தமில் மொலி தினப் போட்டிக்கான விலாமேடை சிறப்பாக கண்கவர் நியோன் விலக்குகலால் அலங்கறிக்கப்பட்டு, கண்ணுக்கு மையிட்ட அலகான பெண் தொகுப்பாலினி, சிறப்பாக தொகுத்து வலங்கிக் கொண்டிறுந்தால்.  அடுத்ததாக நான் ஆவலுடன் எதிர் பாத்திறுந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளறை அறிவிக்கும் நேறம் வந்தது. காரணம் இவ்வாண்டுக்கான சிறந்த எலுத்தாலர்கலாக தமில் நேசன், ஆகாயத்தாமறை, இலமாறன் மற்றும் நான் தெறிவாகியிறுந்தோம்.  தொகுப்பாலினி தன் இனிய குறலில் "  நாம் வறுடா வறுடம் தமிலை எலுத்துப் பிலையில்லாமல் எலுதக்கூடியவர்கலுக்கு வலங்கிவறும் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விறுதை,  இம்முறையும் தமில் நேசனுக்கு வலங்குவதில் நாம் பெறு மகில்ச்சி அடைகின்றோம்". என் விறுது கனவு இம்முறையும் கலைந்து, நெஞ்சுக்குல் சுறுக் என்று பிசுங்கான் குத்தியது!  * * * * * #சிறுகதை #தமில்விறுது

முடிவல்ல,மீண்டும் ஆரம்பம்!

அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்! இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி.  இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.  இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது,  குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது.  சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது. பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில்  ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது.  போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்கியவர்கள், 2019 ல் பில்லியனர்க

கேடுகெட்டவர்களின் காதல்!

அவன் பார்த்தான். அவள் சிரித்தாள். அப்போது பிறந்ததை காதல் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்! கடற்கரையில் ஒன்றாக கால் நனைத்தார்கள். வகுப்பறையில் தனியாக முத்தமிட்டுக் கொண்டார்கள். பூங்காவில் மெய்மறந்து அணைத்துக் கொண்டார்கள். இரவுப் பேரூந்தின் இறுதி இருக்கையில் ஒருநாள் எல்லை மீறினான் அவன். ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி  வியந்தாள் அவள். ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி பித்துப்பிடித்தான் அவன். அவளோ தவித்தாள்! தடுக்கவும் மனமில்லாமல், அனுமதிக்கவும் முடியாமல் அவள் தவித்தாள், உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள். அவனோ வேண்டுமென்றே  மிச்சம் வைத்தான்! அப்போது  அவர்கள் இருக்கை முழுவதும்  நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்! மறுநாள், உபத்திரவமற்ற  ஹோட்டல் அறையில், காதலின் பெயரால்  அவள் ஆடை களைந்தாள்- உலகத்தின் சார்பாக ஒளித்துவைக்கப்பட்ட அவனது கைபேசியின் கமெராக் கண்கள் அதைப் பதிவுசெய்வதை அறியாமல்! உச்சமடைந்து, உடல்கள் களைத்து, கறைகள் களைந்து, ஆடை அணிந்து அறையை விட்டு வெளியேறினர். கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும் அவர்களுடன் போக மனமில்லாமல், கட்டிலில்

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழையாய்  சமயங்களில் மாறித்தான் விடுகிறேன்... ஏனென்றால், இவற்றுக்க

வெட்கக்கேடு!

* ** *** ** * கால்கள் செயலற்றுப்போன  இளைஞன் ஒருவன் தன்நம்பிக்கையுடன், சாலையில்  பழங்கள்  விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்... தகுந்த வேலைக்காக தலைக்கனத்துடன் காத்திருக்கும் சில வேலையற்ற பட்டதாரிகள் சார்பாக வெட்கித்தலை குனிந்தேன்! . . .