Skip to main content

Posts

Showing posts from December, 2011

சின்னச் சின்னக் கவிதைகள்

தொட்டதும் அதிர்கிறேன். மின்னாலும், உன்னாலும்! * கூந்தலைப் பரப்பிவிட்டாய். மிரண்டுபோய் ஒளிந்துகொண்டது இரவு. * தேன் தொட்ட பலாச்சுளைகள் - உன் மேலுதடும், கீழுதடும். * நீ என்னை  அலங்கரிக்கின்றாய்... ஞாபகத்தில் வந்து நின்றது நேர்ந்துவிட்ட ஆடு. * இக்கணமே செத்துப்போவோமா என்கிறாய்... வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே நம் உடல்கள்! * எந்தப்பூக்களும்  தங்களைத் தாங்களே பிய்த்துக் கொள்வதில்லை. காதலில் மட்டும்தான் அப்படிச் செய்வதற்கும் அனுமதியட்டை கிடைக்கின்றது! . .

நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டு

உனக்கு என்னிடம் பிடித்ததே எதற்கும் இணங்கும் இந்த மௌனம் தான் என்று தெரிந்ததும் விழுந்து உடைந்தன - உனக்காக சேர்த்து வைத்திருந்த யேர்மன் தேசத்து வார்த்தைக் கண்ணாடிகள்! நான் கவிதைகளின் காதலன். நீயோ கடனட்டைகளின் சேமிப்பகம்! உனக்கு கவிதை பிடிக்காது என்பதற்காக நான் குற்றவாளி என்று அர்த்தமில்லை! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டிலிருந்து இத்தாலிய உணவுகளை எதிர்பார்க்கும் பெண்ணே! எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் எட்டியா உதைவாய்? சரி, உன்னை என் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறேன். காறித் துப்புகிறாயே! பரவாயில்லை, உன்னை கடலலையாக நினைத்துக் கொள்கிறேன். ஒரு கணம் நின்று கேள்! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டென்பது எதிர்பார்ப்புக்களால் மலம் களிக்கப்பட்ட ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவுமல்ல! . .

வாழ்க்கை எனும் சூத்திரம்

மக்கு மனிதா! சொர்க்கம் என்று நிச்சயமாக எதுவுமில்லை. அது இங்கே தான் இருக்கிறது.... சிலருக்கு போதையின் வடிவில் ( மண் போதை, மது போதை, பண போதை, பதவி போதை, பெண் போதை, பொன் போதை  எல்லாமும் தான்......) சிலருக்கு காதலின் வடிவில், சிலருக்கு காரின் வடிவில், சிலருக்கு i-phone இன் வடிவில், சிலருக்கு android இன் வடிவில்.......... ஆசைப்பட்டதை அடைந்துவிட வேண்டும். எப்படி? நியாயமாக ஆசைப்பட்டு, நேர்மையாக அடைந்துவிட வேண்டும். வாழ்க்கை எனும் சூத்திரத்தில் குழம்பிக்கொள்ள எதுவுமில்லை. அதை இலகுவாக்க ஒரே வழி - தலைகீழாக வைத்துப்படிக்கும் சூத்திரத்தை நேராக வைத்துப்படியுங்கள் அவ்வளவே! நாளைக்கு உண்பதற்காக இன்றைக்குப் பட்டினி கிடப்பதில் அர்த்தம் இல்லை. இளமையை சேமிக்கப் பயன்படுத்திவிட்டு, முதுமையில் எதையும் செலவழிக்கப் போவது கிடையாது! கால இயந்திரம்  கண்டுபிடிக்கப்படும் வரை இறந்த காலத்தை மீண்டும் வாழ்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. மறந்துவிடாதீர்கள்! இன்பமுற வாழுங்கள்.... பால் போல நுரைக்க நுரைக்க, மூங்கில் போல தழைக்கத் தழைக்க! . .

prof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்!

ஜனவரி 8, prof. Stephen Hawking அவர்களது 70தாவது பிறந்த தினம், அவரை மனதார வாழ்த்திச் சிறப்பிக்கும் முகமாக பகிரப்படும் பதிவு இது. Happy Happy Birthday Dear Stephen Sir............ (:-D) அறிவியலில் ஆர்வமுள்ளவர்களிடம்,  “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி யார்?” என்று கேட்டால், தயங்காமல் சொல்வார்கள் ஸ்டீபன் ஹௌகிங் (pro. Stephen W. Hawking) என்று. இத்தனைக்கும் அவர் ஒன்றும், ஹொலிவூட் படங்களில் வரும் விஞ்ஞானிகளைப் போல விசில் அடித்தபடி, ஒற்றைக் கையால் கார் ஓட்டுபவரோ அல்லது தனது வசீகரிக்கும் பேச்சாலும் கவர்ந்திழுக்கும் கண்களாலும் பெண்களை தன் வலையில் விழ வைப்பவரோ அல்ல. அவரை முதன் முதலில் பார்க்கும் யாரையும் பரிதாபப்பட வைக்கக் கூடிய நிலையில் இருப்பவர். ஆம், உண்மையில் அவர் ஒரு நோயாளி!. அவர் ALS/MND எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இங்கு ALS என்பது Amyotrophic Lateral Sclerosis இனையும், MND என்பது Motor Neurone Disease என்பதையும் குறிக்கின்றது. இந்த நரம்பியல் நோயால் வருடந்தோறும் உலகம் முழுவதும் 350,000 பேர் பாதிக்கப் படுவதாகவும், 100,000 பேர் இறந்துபோவதாகவும்

மனதில் பட்டவை - 2

நாம் எல்லோரும் பைனாகுலர் பயன்படுத்தும் போட்டி ஒன்றில் பங்குபற்றிக்  கொண்டிருக்கிறோம். நம் எல்லோரிடமும் விலை கூடிய, அழகான பைனாகுலர் ஒன்று தரப்பட்டிருக்கின்றது. அதை புத்திசாலித் தனமாகப் பயன் படுத்தி வெற்றி பெறாமல், தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் நாம் அந்த பைனாகுலரை பெருப்பித்தும், கிட்டவாக்கியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அநத் பைனாகுலரைத் திருப்பி, அதன் மற்றைய பக்கத்தால் பார்க்கும் போது, அது காட்டும் பொருள் சிறிதாகவும், தூரத்திலும் தெரிவதை பெரும் பாலும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவர்களில் பலர் இந்தப் போட்டியில் தோற்றும் விடுகிறார்கள்.  அந்த பைனாகுலரின் விஞ்ஞானப் பெயர்................வாழ்க்கை! * ஓடும் நீர் ஆவியாகி மேலெழுவதும், அந்த நீராவி மழையாகி நிலத்தில் பெய்து  மீண்டும் ஓடும் நீருடன் சேர்வதும், அதன் ஒரு கிளை தனியாகச் சென்று உறைந்து போய் பனிக்கட்டி ஆவதும் வாழ்க்கை வட்டத்தின் இயல்பு நிலைகள்.  என்ன இந்த நீர் நமக்கு அடங்காமல், கட்டுப்பாடுமில்லாமல் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆத்திரப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஓடுவதால் த