Skip to main content

prof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்!



ஜனவரி 8, prof. Stephen Hawking அவர்களது 70தாவது பிறந்த தினம், அவரை மனதார வாழ்த்திச் சிறப்பிக்கும் முகமாக பகிரப்படும் பதிவு இது.
Happy Happy Birthday Dear Stephen Sir............ (:-D)

அறிவியலில் ஆர்வமுள்ளவர்களிடம்,  “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி யார்?” என்று கேட்டால், தயங்காமல் சொல்வார்கள் ஸ்டீபன் ஹௌகிங் (pro. Stephen W. Hawking) என்று. இத்தனைக்கும் அவர் ஒன்றும், ஹொலிவூட் படங்களில் வரும் விஞ்ஞானிகளைப் போல விசில் அடித்தபடி, ஒற்றைக் கையால் கார் ஓட்டுபவரோ அல்லது தனது வசீகரிக்கும் பேச்சாலும் கவர்ந்திழுக்கும் கண்களாலும் பெண்களை தன் வலையில் விழ வைப்பவரோ அல்ல. அவரை முதன் முதலில் பார்க்கும் யாரையும் பரிதாபப்பட வைக்கக் கூடிய நிலையில் இருப்பவர். ஆம், உண்மையில் அவர் ஒரு நோயாளி!.


அவர் ALS/MND எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இங்கு ALS என்பது Amyotrophic Lateral Sclerosis இனையும், MND என்பது Motor Neurone Disease என்பதையும் குறிக்கின்றது. இந்த நரம்பியல் நோயால் வருடந்தோறும் உலகம் முழுவதும் 350,000 பேர் பாதிக்கப் படுவதாகவும், 100,000 பேர் இறந்துபோவதாகவும் International Alliance of ALS/MND Associations http://www.alsmndalliance.org/ கூறுகின்றது. அந்த நோயைப் பற்றிக்கூறுவதானால், அந்த நோய் வந்தவர்களால் எழுந்து நடமாட முடியாது, சக்கர நாற்காலிதான் கதி. கை, கால்களை செயற்படுத்த முடியாதபடி முடக்கி விடும். பேச முடியாது, உணவை தாமே உண்ண முடியாத நிலை. கண்கள் மட்டுமே அசையும், மூளை இயங்கும். தங்களின் ஒவ்வொரு அசைவிற்கும் அடுத்தவரை முற்றுமுழுதாக நம்பியிருக்க வேண்டிய பரிதாபகரமான நிலை! எதிரிக்கும் வரக்கூடாத நிலை. இதனால் மனிதர் சோர்ந்து விட்டாரா என்று கேட்டால், இல்லை என்றே அவர் சாதனைகள் அடித்துச் சொல்லும். தன்நம்பிக்கையில் மனிதர் அசகாய சூரர்! 


என்னைப் போல பலரும் அவரை பிரமிப்புடன் பார்ப்பதற்கு காரணங்கள் ஏராளம் உண்டு. மிக முக்கியமானது யாதெனில், 1988 ம் ஆண்டு, முட்டாள்கள் தினத்தில் வெளியிடப்பட்ட A Brief History of Time எனும் அவரது புத்தகம் தான். உலகையே புரட்டிப்போட்ட புத்தகம் அது. வெளியிடப்பட்ட நாள் முதல் விற்பனையில் சாதனை படைத்து, அதிகளவான பிரதிகள் விற்கப்பட்டதுடன், 40 பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் அது. அந்த ஒரு புத்தகம் மூலம் உலகையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்து, தான் யார் என்பதை இந்த உலகுக்கு காட்டினார் ஸ்டீபன்.


அந்தப் புத்தகத்திலே அவர்,
காலம் மற்றும் வெளி, விரிவடையும் பிரபஞ்சம், இயற்கையின் ஆதார விசைகள், Black Holes எனப்படும் கருந்துளைகள், பிரபஞ்சத்தின் உருவாக்கம்,   Worm Holes எனப்படும் புளுத்துளைகள் மற்றும் காலப்பயணம், Theory of Everything என்பவற்றை ஆராய்ந்து கட்டுரையாக எழுதியிருந்தார். அது முதற் கொண்டு, அவர் சொல்பவற்றை இந்த உலகமே செவிமடுத்துக் கேட்க ஆரம்பித்ததோடு, அவரை ஐன்ஸ்ரினுக்குப் பிறகான சிறந்த பௌதிகவியலாளராகவும் ஏற்றுக் கொண்டது.
இன்றுவரை அவர் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றிய படியும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை வழங்கியும் பௌதிகவியலிற்கு பெரும் பங்காற்றிவருகிறார். இன்றைய சந்ததியினர் மத்தியிலும் அவர் வெளியிட்டு வரும் வேற்றுக்கிரக வாசிகள் மற்றும் காலப்பயணம் பற்றிய கருத்துக்கள் வெகு பிரசித்தம் வாய்ந்தவை.



ஸ்டீபன் ஹௌகிங்கின் வரலாற்றுத் துளிகள் சில :-

பிறப்பு :
ஜனவரி 08, 1942ம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட் நகரில். சரியாக கலிலியோ கலிலி இறந்து 300 ஆண்டுகள் கழித்து!   


கல்வி :
11ம் வயதில் St. Albans School பின் University College, Oxford. ஹௌகிங் விரும்பியது கணிதம் பயில, அவர் தந்தை பயிலச் சொன்னது வைத்தியம். ஆனால் University College இல் கணிதம் இல்லாததால் அவர் தெரிவு செய்தது பௌதிகவியல்! யார்யாருக்கு என்ன தேவை என்று இயற்கைதான் தெரிவு செய்கிறது போல....

3 வருடங்கள் கழித்து, அதிகம் அலட்டிக்கொள்ளாமலேயே, இயற்கை விஞ்ஞானத்திற்காக first class degree ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.   
பின்னர், பிரபஞ்சவியலை அதுதான் cosmology ஐப் பற்றி ஆராய கேம்பிரிட்ஜ் சென்றார். ஆனால் அந்த வேளை, அந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய அங்கு யாரும் இல்லை. எப்படி இருப்பார்கள்?

தனது Ph.D ஐப் பெற்றதுடன் Gonville மற்றும் Caius College களில் முதலில் சக ஆராய்ச்சியாளராகவும், பின்னர் தொழில் ரீதியான முனைவராகவும் ஆனார்.

1973 ல் Institute of Astronomy (வான சாஸ்திரத்திற்கான கல்வி நிறுவனம்) ஐ விட்டு விலத்தி, 1979 ல் Department of Applied Mathematics and Theoretical Physics (பிரயோக கணிதம் மற்றும் கோட்பாட்டு பௌதிகவியலுக்கான துறை) இற்கு வந்தார். 
அத்துடன் 1979 முதல் 2009 வரை Lucasian Professor of Mathematics என்ற பதவியையும் வகித்தார். இந்தப் பதவியானது, 1663 இல் Henry Lucas என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பதவியானது முதன் முதலில் Isaac Barrow என்பவராலும் பின்னர் 1669 ல் Isaac Newton ஆலும் வகிக்கப் பட்டிருந்தது. ஆமாம் அப்பிள் பழம் திடீரென்று தலையில் விழுந்ததால், அதன் மேல் கடுப்பாகி புவியீர்ப்பைக் கண்டுபிடித்த அதே Isaac Newton தான்.

தற்போது Cambridge இல் உள்ள DAMTP ல் கோட்பாட்டுப் பிரபஞ்சவியலுக்கான நிலையத்தில் ஆராய்ச்சி இயக்குனராகப் பணியாற்றுகின்றார். ( Director of Research at the centre for Theoretical Cosmology, at DAMPT in Cambridge )


வாழ்க்கை :
மனைவி மற்றும் பிள்ளைகள் தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும், தன்னை அன்பாக நேசித்துப் பாசத்துடன் கவனித்துக் கொண்ட தாதியை திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.




அவர் இன்னும் பல காலம் சிறப்பாக வாழ்ந்து, எதிர்கால சந்ததியினருக்கும் தனது அறிவை வாரி வழங்க வேண்டும் என்று இயற்கையை மனதார வேண்டிக்கொள்வோம்.


*மேலதிக விரிவான தகவல்களுக்கு விக்கிப்பீடியாவில் http://en.wikipedia.org/wiki/Stephen_William_Hawking


* Discovery Channel இல் அவர் வழங்கிய நிகழ்ச்சிகளைக் காண http://dsc.discovery.com/tv/stephen-hawking/

.
.

Comments

  1. ஆம். நண்பரே அவரது புத்தகத்தின் தமிழ் பதிப்பான காலம்-ஒரு வரலாற்றுச் சுருக்கம் படித்து வியந்து, மிரண்டு போனவர்களுள் நானும் ஒருவன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி