Skip to main content

பணமும் காதலும் (2010)



பணக்காரர்களின் 
காதல் 
எப்படியிருக்கும்?

கரன்சி நோட்டுத்தான் 
இவர்களின் காதல் குறியீடா?
இதயம் என்பதென்ன 
இங்கே இலவம் பஞ்சா?

பணம் தான் இவர்களின் 
பல்லாக்கு என்றால் 
மனம் என்பதென்ன 
வெறும் மண்ணாங்கட்டியா?

ஐயா!
பணம் பார்த்து 
வருவதன் பெயர்
காதல் என்றால் 
விபச்சாரத்தை யாரும் 
விலக்கி வைக்க மாட்டார்களே?

பணம் என்பதெல்லாம் 
வெறும் பகட்டுக்குத் தான்.
குணம் ஒன்று தான் 
என் குறிக்கோளே!

தராதரம் பற்றிப் பேசவும் 
ஒரு தகுதி வேண்டாமா?
நான் வாழ்க்கையில் 
ரொம்பவே பட்டவன். 
ஆயினும் 
ஒழுக்கத்தை 
ஒழுங்காகக் கற்றவன்.

உங்கள் பணம் உங்களைத் 
தோலில் சுமக்கும்.
என் காதல் என்னை 
இதயத்தில் ஏற்றும்.
எது பெரிது?

நம்மிடம் என்ன இல்லை?
என்னிடம் பணம் இல்லை.
உம்மிடம் இதயம் இல்லை.
நம்மிடம் என்ன இல்லை?

முறை என்னும் சமன்பாட்டை 
முயன்று தீர்த்தேன்.
முறை தான் இங்கே 
முரண் கொள்கிறதாம்...
x இற்கும் 
y இற்கும் இங்கு 
என்னய்யா சம்பந்தம்.
எல்லாம் 
படைப்பின் சித்தம்.

பத்தாயிரம் ரூபாயில் 
பட்டுப் புடவை,
நகை நட்டும் தருவார் 
உன் அம்மா.
உனக்குப் பிடித்ததாய் 
ஒரு வரி கேட்பாரா?

உன் தேவையும் 
என் தேவையும்
ஒத்துப் போனதால் தானே 
நமக்குள் 
புது உறவே முளைத்தது...

பணம் படைத்த 
பரதேசி 
நாளை வருவான்.
தலையாட்டி பொம்மையே 
தயாராய் இரு!

ஏமாற்றி விட்டதாக 
இறுமாப்புக் கொள்ளத் தேவையில்லை...
எப்போதோ செத்து விட்டேன்.
இழவு முடித்து 
செலவுக்கு வாருங்கள்...
.
.

Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி