இரவு ஏழு மணிக்கெல்லாம்
ஏதும் எழுதச் சொல்கிறது
தனிமை.
தனிமை கூட
ஒருவகையில்
மருத்துவம் தான்.
சோகமான பொழுதுகளில்
சுகம் தருகிறதே?
தனிமை -
எப்பொழுதும்
சக்தி மிக்கது!
சூரியனின் தனிமை
சுட்டெரிக்கிறது.
நிலவின் தனிமை
அழகில் மிக்கது.
தாஜ்மஹாலின் தனிமை
காதலை ஆள்கிறது.
பாகற்காய் போன்றது
தனிமை.
அவ்வப் போது
சேர்த்துக் கொண்டால்
ஆயுளுக்கும் நல்லது.
பின்னிரவுப் பொழுதுகளில்
பிரகாசம் குறையும் போது
தாலாட்டவும் செய்கிறதே
தனிமை.
தனிமை ஒரு கொடை தான்.
திகட்டாத வகையில் - அதை
பாவிக்கும் போது.
.
.
.

4 comments:
உண்மைதான் நண்பரே...கவிதை ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்..
கமலேஷ் - வாழ்த்துக்களுக்கு நன்றி
superb
Thanks Krishna
Post a Comment