நான் ஈர்ப்பு விதியை
உணர்ந்தது
இரண்டில்.
ஒன்று காந்தத்தில்
மற்றது உன் கண்களில்.
பெண்கள் சிரிப்பது கூட
இரண்டு வகையில் என்பேன்.
பாவப்பட்டு மற்றும்
பழக்கப்பட்டு.
கணித பாடத்தில்
நீ கெட்டிக் காரியாமே ?
சந்தேகம் கேட்கவென்றே
முட்டாளாக முயற்சிக்கிறேன்.
தமிழ் பாடத்தில்
கவிதை கேட்ட போது
நீண்டதாகச் சமர்ப்பித்தாய்.
என்னைக் கேட்டால்
உன் பெயரே போதும்.
உனக்குப் பிடித்த கலர்
நீலமாமே ?
அப்பாடா !
இதிலாவது ஒத்துப் போகிறதே ?
எனக்குப் பிடித்தவர்களின்
பட்டியலில்
முதலாவதாய் நீதான்.
உனக்குப் பிடித்தவர்களின்
பட்டியலில்
கடைசியாயாவது நானுண்டா ?
.
.
.
Comments
Post a Comment