நீ நாணங்கொள்வதைச்
சொல்லி விடுகின்றன
மெல்ல விரியும்
உன் ஓர்கிட் கண்கள்.
பல விதங்களில் பூக்கள்
உன் கூந்தலில்...
முன்பை விட
அழகு என்னவோ
பூக்களுக்குத்தான்.
நீ பாரதியின் புதுமைப் பெண்.
இருந்தும்,
அவைகளைத் தீண்டுவதில்லை
எனப்புலம்புகின்றன
ஊனமுற்ற பட்டாம் பூச்சிகள்.
வாக்குப் போட்டு
அதிசயங்களைத் தெரிகிறார்கள்.
உன் புன்னகையிலேயே
அதிசயங்கள் மொத்தமும்
அடங்கி விடும்
என்பேன் நான்.
அம்மா ராசிபலன்
பார்ப்பாள்.
நான் பார்ப்பதில்லை.
நற்பலனாய் நீயிருக்க,
அது எதற்கு?
என் ஒரு கோடி
ஞாபகத்துணிக்களும் நிரம்பிற்று.
இன்னும் உன் நினைவுகளைச்
சேர்க்க வேண்டும்.
உத்தி ஒன்றை
உபயம் செய்யேன்.
என் காதலியே?
.
.
.
Comments
Post a Comment