கண்களுக்குள்
உனது முகம்.
உனக்கு
கடவுள் நம்பிக்கை அதிகம்.
எனக்கு
கோவில் வரும் உன்னில்
காதல் அதிகம்.
முன் வீட்டில்
முஸ்லிம் நண்பிகள்,
சிங்களச் சிநேகிதிகளும்
உனக்குண்டு.
சைவமாய் இருந்தும்
சர்ச் செல்வாய்.
உன்னைப் போலவே
எனக்கும்
எம்மதமும் சம்மதம்.
இருந்தால் போல்
கூர்மையாகப் பார்க்கின்றாய்.
என்னவென்று
எடுத்துக்கொள்ள?
வெறுப்பா? அல்லது
காதலா?
தவழும் கூந்தலுக்கு
வூல் பான்ட் போடக்கூடாதா?
பேதலிக்கிறதே
மனசு.
சுடிதாரில் மட்டுமல்ல
பாவாடை தாவணியிலும்
நீ பட்டாம் பூச்சிதான்.
உன் மணி பர்சில்
சில்லறை சிணுங்கும்
என் மணி பர்சில்
உன் சிரிப்புக்கள்.
உன் உதடுகள் படபடக்க,
இதயமோ மௌனிக்கும்.
என் உதடுகள் மௌனிக்க
இதயம் தான் படபடக்கும்.
எதிர் காலம் பற்றி அதிகம்
பேசுவாய்.
நான் பேசுவதில்லை.
நீ தான் வேண்டும் என்று
நான் கேட்டால்
அனுமதிப்பாயா என்ன?
.
.
.
நல்லாயிருக்குங்க
ReplyDelete