உனது பெயர் கொண்ட
பூந்தோப்பினுள்,
பூக்களை விடுத்து,
முட்களை மிதித்து
நடந்த போதிலும் சரி.
சுவர்க்கம் என நினைத்து
பாதாளச் சாக்கடையூடு
தட்டுத் தடுமாறி
குற்றுயிராக
வந்தபோதிலும் சரி.
சவக்காலையில்
பாதி எரிந்தும் எரியாததுமான,
உன்னால் வஞ்சிக்கப்பட்ட
என்
பிணங்களைச் சுற்றி இருந்து
அழுதபோதிலும் சரி.
காதலை ஒரு போதும்
சபித்ததில்லை.
காதல் -
எந்தவொரு வேளையிலும்
அற்புதமாகவே இருந்திருக்கிறது.
உண்மையாக,
இன்னும் உரத்து!
இல்லாத கடவுளுக்கும்,
எங்கேயோ இருக்கும் அவளுக்கும்
கேட்க வேண்டும்!
காதல் -
மிக மிக அற்புதமானது.
காதலி...
ஒருபோதும் அல்ல!
.
.
.
Comments
Post a Comment