கிழவி :
சிங்கமென சிறுத்தை என
சீறிவரும் காளையென
உன் ஒத்த பையன்கள்
ஊர்க்கோலம் போகையிலே
ஏனப்பா இச்சோகம்?
விழியில் என்ன நீர்க்கோலம்?
மீசை முளைத்த பையன்
அழுவதுவோ வெட்கமையா,
சொல்லிவிடு உன் சோகம்
நானிப்ப உன் சொந்தம்.
பையன் :
ஆடிமாச திருவிழாவுக்கு
ஆத்தா கூட அவ வந்தா.
பட்டணத்துக்காரி தான்
பதுமையாட்டம் அழகாக.
சிரிக்க சிரிக்க அவ பேச
சில்லறையா சிதறிப்போனேன்.
உசிரெல்லாம் புல்லரிக்க
மனசுக்குள்ள புகுந்துக்கிட்டா.
காத்திருந்து காத்திருந்து
காதலைத்தான் நான் சொன்னேன்.
கை கொட்டி அவ சிரிச்சா.
கண்டபடி திட்டிப் புட்டா!
கிழவி :
ஒத்தைக் கை தட்டி
ஓசை வராதுய்யா.
மனசைக் கலைச் சுப்புட்டு
மகிழ்ச்சியாதான் வாழப்பாரு.
உனக்காக அவ ஒருத்தி
எங்கேயோ ஒளிஞ்சிருக்கா.
காலங்கடத்தாம ஒழைச்சுவை
அவ வருவா!
.
.
.
Comments
Post a Comment