என்னை கடுமையாகப்
பார்த்தவள் நீ.
இலகுவாக
எழுதச் செய்தது காதல்.
கலண்டரில் வரும்
அறிவுரைகள் இருக்கட்டும்.
எப்பொழுது என்
கவிதைகளை
படிக்கப் போகின்றாய்?
இரவுகளில்
இதய ராகம்
விரும்பிக் கேட்கிறாய்.
சினிமாவில்
காதலை இரசிக்கிறாய்.
நான்
காதல் பேசும் போது மட்டும்
ஏன் விலகிச் செல்கிறாய்?
நீ மெழுகுவர்த்தி மீதே
பாவம் கொள்பவள்.
என் அழிதலை
எப்படி உன்னால்
சகிக்க முடிகிறது?
எப்போதும்
விட்டத்தையே
பார்த்துக் கொண்டிருப்பதாக
புலம்பும் அம்மா
எப்படி அறிவாள்
காதலின் மரண அவஸ்தைகளை?
ஏதும் பதிலை
சீக்கிரம் சொல்லடி பெண்ணே.
என்னை நான்
மாற்றிக் கொள்ள வேண்டும்
அல்லது
மாய்த்துக் கொள்ள வேண்டும்.
.
.
.
Comments
Post a Comment