Skip to main content

ஹலோ டயரி - 2


பாங்கும் வேலையும் :
பாங்கில் வேலை செய்பவர்கள் என்றவுடன் இந்த சமூகத்தால், ஏனென்றே தெரியாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் சதா பணத்துடன் புழங்குகின்றார்கள் என்றோ அல்லது முற்றிலும் குளிரூட்டப்பட்டு, அழகுபடுத்தப் பட்ட அந்த விசாலமான அறையில் தங்களை வரிசையில் காக்க வைத்து கீபோர்ட்டில் என்னமாய் கிளிக்கு கிறார்களே என்ற பிரமிப்பிலோ தெரியாது.
உண்மையில் அதற்குப் பின்னுள்ள சூட்சுமங்கள் பலருக்குத் தெரிவதில்லை.

இப்படித்தான் தனியார் வங்கியொன்றின் தமிழ் பிரதேசக் கிளையின் பதவி ஒன்றிற்கு விண்ணப்பித்து, அவர்களின் அழைப்பின் பேரில் நேர்முகப் பரீட்சைக்குப் போய் இருந்தேன். ஆங்கில மொழியில் எழுத்துப் பரீட்சை வைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் நால்வரை அடுத்த கட்டத்திற்குத் தெரிவு செய்தார்கள்.
அடுத்த கட்டமென்பது ஒரு கண்னாடி அறைக்குள், தலை விரி கோலமாய் இருக்கும் வயதான பெண்மணி, தேவைக்கும் அதிகமாய் சிரித்தபடி, ஆங்கிலத்தில் அபத்தமாக கேள்விகள் கேட்பார், கேட்டார்.

முடிவுகளை அறிந்து கொள்ள மாலை வரச் சொன்னார்கள். சென்றேன். என்னைத் தெரிவு செய்ய வில்லை என்றார்கள். காரணம் கேட்டேன். சொல்ல மறுத்தார்கள். பரீட்சையில் தேறியவர்களில் மும் மொழிகளிலும் ஓரளவுக்காவது பரிச்சயம் கொண்டவன் நான் மட்டுமே என்பதை நினைவு படுத்தினேன்.
அவர்கள் கவரும் உடற்தோற்றத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள்!!

இதை அவர்கள் பத்திரிக்கை விளம்பரத்திலேயே சொல்லி இருந்திருக்கலாம்; சிகப்பான, கவரும் தோற்றமுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.  மீறி வருபவர்கள் அவமானப் படுத்தப் படுவார்கள் என்று!. அல்லது பரீட்சை எழுதும் போதாவது பரீட்சை தாளைப் பறித்து விட்டு,”இது பணம் படைத்தவர்களுக்கும், பகட்டுத் தனமானவர்களுக்குமான வேலை, பரதேசியான உங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை” என்றாவது அந்தப் பெண்களில் யாராவது சொல்லியிருக்கலாம். இப்படி கூப்பிட்டு வைத்து உணர்வுகளை நிர்வாணமாக்கத் தேவையில்லையே!!!    

பாங்கில் உட்காந்திருப்பவர்களைப் பாருங்கள் நிச்சயம் அதிகார வர்க்கங்களின் வேண்டியவர்களாக இருப்பார்கள். அவர்களின் தகுதியென்பது இங்கே இரண்டாம் பட்சம் தான். அதிலும் சிலர் பணம் கட்டி வேலையில் சேர்ந்து விட்டு அவர்கள் பண்ணும் அலப்பரை இருக்கிறதே! என்ன பெரிதாக வேலை பார்க்கிறார்கள், இலக்கங்களைக் கணினியில் பதிகிறார்கள், வெறும் இலக்கங்கள், பூச்சியங்கள்!! வாடிக்கையாளரைக் கவரத்தான் அழகானவர்களை வங்கிகள் விரும்புகின்றன என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி இருப்பதில்லயே! வாடிக்கையாளர்களை எங்கே மதிக்கிறார்கள், அத்தனையும் அலட்சியம். திமிராக மட்டுமே பேசுகிறார்கள். அதிகார வர்க்கங்களின் அடி வருடிகள் என்கிற மமதை!!எமது ஊரில் இப்போதெல்லாம் அதிகமான தனியார் வங்கிகள் வரத் தொடங்கியுள்ளன. இப்போதெல்லாம் இங்கே அரசியலை அடுத்து அதிகமாகப் பேசப்படுவது; ஐந்து லட்ச ரூபாய் கட்டினால் அந்த வங்கியில் வேலை, நான்கு லட்ச ரூபாய் கட்டினால் இந்த வங்கியில் வேலை என்று.      

இப்படித்தான் ஒருவர் பத்து வருடங்களுக்கும் மேலாக தனியார் வங்கி ஒன்றில் நிரந்தரமானதாக இல்லாமல் வேலை பார்த்து வந்தார். அதிகார வர்க்கங்களின் அடிவருடிகள் புதிதாக நிரந்தரமான வேலையைப் பெற்றுக் கொண்ட போதும், இவர் புற்கக்கணிக்கப் பட்டே வந்தார். இத்தனைக்கும் அவர் மிக்க நேர்மையாளன், கடின உழைப்பாளி. இத்தனை வருட காலம் காத்திருந்தும் பலனளிக்காததால், மிகுந்த மன வேதனையுடன் அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வேறு வேலை தேடிக் கொண்டார்.     

வங்கிகளுக்கு எப்போதுமே பணம் படைத்தவர்களும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் மட்டுமே முக்கியம். ஏனையோர் இரண்டாம் பட்சமே!
வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கு ஆடம்பரமும், பகட்டுத் தனமுமே பிரதானமானவை. உழைப்பாளியின் வியர்வை மணம் அவர்களுக்குத் தேவையில்லாத விடயம் அல்லது அருவருக்கத் தக்க செயல்!
.
.
.

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...