Skip to main content

மனதில் பட்டவை



துவும் நடக்கவில்லையே என்கிற யோசனையில் அதிகம் நகம் கடிப்பவரா நீங்கள்.?
அப்படியாயின் நல்லது.
நீங்கள் ஒன்றும் வீண் பொழுது போக்கவில்லை. உங்கள் நகத்தைச் சுத்தமாக்குவதில் நேரத்தை முதலிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

................................................................................................................................................................

ண்பர்கள் மேல் கோவமா? அவர்கள் கண்கள் பார்த்து, மௌனமாகத் திட்டுங்கள். நண்பர்களைப் பாராட்ட வேண்டுமா? நண்பனைத் தவிர மற்ற வர்களிடம் அவனைப் பற்றி சத்தமாகப் பாராட்டுங்கள்!

................................................................................................................................................................


லகமே நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்கிறார்கள். எனக்குத் தரப்பட்டது மோசமான கதாபாத்திரமோ என்னவோ!

................................................................................................................................................................


பெண்கள் பூக்களின் இதழ்களைப் பிய்த்துப் போடுபவர்கள். ஆண்கள் அழகானவற்றைக் கற்பழிப்பவர்கள். நான் இயற்கையை என்றென்றைக்கும் ஆராதிப்பவன். எனக்கு நண்பனோ அல்லது நண்பியோ இல்லை. 
நம்புங்கள்!

................................................................................................................................................................

ல்லோரும் பணத்தைச் சம்பாதிக்க ஓடுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!.  இன்னும் அதிகமாகச் சேருங்கள். உங்கள் சவப்பெட்டியை உயர்ந்ததாக்கவும், பூக்களால் அலங்கரிக்கவும் அது உதவும்!

................................................................................................................................................................


நிறையத் தோற்பதிலும் வசதி இருக்கிறது. தோற்பவர்களால் மட்டுமே தொடர்ந்தும் கற்றுக் கொள்ள முடிகிறது. வெல்ல ஆரம்பிப்பவர்கள் தான் கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்து விடுகிறார்களே!

................................................................................................................................................................


பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லையா? அழகிய, கலை வேலைப்பாடுள்ள மட்பாண்டத்தில் உள்ள வெறுமை மட்டுமே தெரிகின்றதா? எதன் மீதும் பற்று இல்லையா?
நல்லது.
ஞானம் பெற்றுவிட்டதாக ஞானிகளும், யோகிகளும் சொல்லக் கூடும். நம்பாதீர்கள்.
மரணத்திற்குத் தயாராகி விட்டதாக, ஒருவேளை psychologist சொன்னால் உடனேயே நம்புங்கள்.
.
.
.   

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...