Skip to main content

மைக்ரோ கவிதைகள் - 03







காதலில் தோற்றவர்கள்
சாலைகளில்
தலைகுனிந்து செல்வதற்கும்,
உலகத்தின்
கடைசி மனிதனாக
தனித்து நிற்பதற்கும்,
நூற்றாண்டு சோகத்தை
புன்னகைத்து மறைப்பதற்கும்
காரணம் காதல் என்பார்கள்..........
உண்மை என்னவென்றால்,
"கசக்கும் வரம் வேண்டுமா?
இனிக்கும் சாபம் வேண்டுமா?"...
என்று எப்போதுமே கேட்கும் காதல்.
விருப்பப்பட்டு
சாபத்தை தேர்தல் .....
காதலின் குற்றமல்ல!







*****




நமக்காகக் கட்டிய கோட்டை
இடிந்து விழுந்த போது
அதிலிருந்து
எந்தப் பீனிக்ஸ் பறவையும்
மீண்டும் பறக்கவில்லை!
மணற்கோட்டைகளில்
சிறகுகள் முளைக்காது
என்பது
அது இடிந்து விழும்வரை
யாருக்கும் புரிவதில்லை!!







*****




பல பெண்கள் பார்க்கச் செய்கிறார்கள் ....
சில பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள் ....
நீ மட்டும் ஏன் என்னை
அழகாகத் தவிர்க்கிறாய்?
என்று கவித்துவமாக 
ஆரம்பிக்கும் 
ஒருதலைக் காதலர்கள்,
தங்களை பகுதிநேரக் கவிஞர்கள்
என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.
அவர்களின் காதல் 
எய்தப்படுவதில்லை என்பதையும் 
நேர்மையுடன் 
ஏற்றுக்கொள்கிறார்கள்.






*****




மின்மானி வாசிப்பாளர் வேலையில் 
தினமும்
சந்தோஷமும் அன்பும் 

செழித்துக் கொளிக்கும் 
ஏழை வீடுகளையும் பார்க்க முடிகின்றது.
சந்தோஷத்திலும் அன்பிலும் 

ஏழ்மையான 
பணக்கார வீடுகளையும் பார்க்க முடிகின்றது....
முன்னையவருக்கு மட்டுமே 

வாழ்க்கைக்கான 
சூத்திரம் தெரியும் போல...






*****




அவமானப் படுத்தியவரிடமும்
ஏன் அன்பாகப் பேசவேண்டும்
என்பது
நண்பனின் முறைப்பாடு.
எதிரியையும் வீழ்த்தவேண்டும் ...
அம்பால் அல்ல
அன்பால்!
அதுவே நல்ல கோட்பாடு.






*****




எல்லோருக்கும் உள்ளேயும் 
ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறது.
அதை அடக்கி ஆள்பவனை 

நல்லவன் என்கிறோம், 
அவ்வப்போது வெளியே விடுபவனை 
சந்தர்ப்பவாதி என்கிறோம், 
சாத்தானாக மாறியவனை 
கெட்டவன் என்கிறோம் .....
நிச்சயமாக
நம் எல்லோருக்குள்ளேயும் 
ஒரு சாத்தான் 
ஒளிந்திருக்கவே செய்கிறது !




.
.
.

Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி