Skip to main content

Posts

Showing posts from August, 2010

நெஞ்சுக்குள் விழும் தாயம்!

கண்களைத் தானே உருட்டுகின்றாய்? என் நெஞ்சுக்குள் ஏனடி தாயம் விழுகின்றது? நீ வீசிய வெட்கத்தில்தான் கொஞ்சம் - வானத்தில் ஒட்டிக்கொண்டு, இரவுகளில் என்னை இம்சைப் படுத்துகின்றதோ? யாருமில்லா நேரம் பார்த்து, இயலாமை சிலுவையில், தவிப்பு ஆணிகளால் என்னை - ஏன் ரசித்து, ரசித்து அறைகின்றாய்? புரிந்து கொள்! வாழ்க்கை குடுவையை வெற்றுக் கற்களால் நிரப்பிக் கொண்டிருக்கின்றேனே... அது உன்னால் தான்! தூண்டிலின் சொந்தக்காரியே! துடித்துக் கொண்டிருக்கின்றேன்... நீருக்குள் விட்டுவிடு அல்லது நிலத்திலாவது போட்டு விடு... . . .

போலி!

நீ - என்  முன்  அழுததும்...  நான் - பிறர்  முன்  சிரிப்பதும்...  . . .

டெங்குப் பெண்ணே!

ஏய்! டெங்குப் பெண்ணே... என்னை நீ அணைத்ததும், முத்தமிட்டதும் போதும்..... என்னை விட்டுச்  சென்று விடு? இப்போதுதான் என்னுள் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது வாழும்  ஆசை! . . .

முறைத்துப் பார்க்கும் வண்ணத்துப் பூச்சி !

நீ சிதறிய வெட்கத்திலிருந்து மெல்லப் பறந்த - ஒரு வண்ணாத்துப் பூச்சி முறைத்துப் பார்க்கிறது. சில்லென்ற சிரிப்புடன் அணைக்கிறாள் மழைப் பெண். இருந்தும் வியர்க்கிறேன்... அருகில், மிக அருகில் உன் அசைவுகள். வீட்டுப் பூனையாக வீறாப்புடன் திரிந்தவனை  கடித்துக் குதறி - உன்  காலடியில் போட்டது  அந்தக் காதல் தான்.  உலகில் பூக்களில்லை. தினமும் அழகாய்ப் பூக்கும் உன்னைத் தோற்கடிக்க... வீட்டில் சாப்பிடமாட்டேன். உன்னைப் பார்த்த பின் பசிப்பதில்லை என்றெல்லாம் இல்லை. பார்வைகளால் உன்னைத் தின்பதே  போதுமாயிருக்கிறது... என்னமோ கேட்கிறாய். சுதாகரித்துக் கொள்ள அவகாசம் கொடு - பதிலுகிறேன்... என் வெப்ப மூச்சை ஆழ்ந்து ருசிக்கிறாய். நாசிக்குள் சென்று உன் உயிருடன் கலப்பதை நானும் உணர்கிறேன். காதலில் சைவம் கேட்பவன். இப்போதைக்கு அப்பால் போகிறேன்! . . .

ஏன் ?

வாழ்க்கை ஒரு முக்கோணமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்திருக்கலாம். ஆ னா லு ம் ஏனோ வட்டமாக இருக்கிறது! பிரிந்தவர் சேர்வதும், சேர்ந்தவர் பிரிவதும்... இயல்புதான். ஆ னா லு ம் ஏனோ வலிக்கிறது!! . . .