கண்களைத் தானே
உருட்டுகின்றாய்?
என் நெஞ்சுக்குள் ஏனடி
தாயம் விழுகின்றது?
நீ வீசிய வெட்கத்தில்தான்
கொஞ்சம் -
வானத்தில் ஒட்டிக்கொண்டு,
இரவுகளில் என்னை
இம்சைப் படுத்துகின்றதோ?
யாருமில்லா
நேரம் பார்த்து,
இயலாமை சிலுவையில்,
தவிப்பு ஆணிகளால்
என்னை - ஏன்
ரசித்து,
ரசித்து
அறைகின்றாய்?
புரிந்து கொள்!
வாழ்க்கை குடுவையை
வெற்றுக் கற்களால்
நிரப்பிக் கொண்டிருக்கின்றேனே...
அது உன்னால் தான்!
தூண்டிலின் சொந்தக்காரியே!
துடித்துக் கொண்டிருக்கின்றேன்...
நீருக்குள் விட்டுவிடு
அல்லது
நிலத்திலாவது போட்டு விடு...
.
.
.
Comments
Post a Comment