Skip to main content

வெட்கத்துண்டை வீசியவள்!





எப்போது பார்த்தாலும், 
படித்தாலும்
மனசை கொள்ளை கொள்ளும்
தபூ சங்கரின் 
காதல் கவிதைகள் நீ!


வெனிஸ்வேலா நாட்டுக்காரியை
உலக அழகியாகத் தெரிந்தார்கள் -
உன்னைப் பார்க்காத
முட்டாள்கள்!


உன் விரலைப் பிரிந்த 
நகத்துண்டு,
உன்னை விட்டு உதிர்ந்த 
தலை முடி,
உன்னை விட்டுத் தவறிய 
கைக்குட்டை என
எதுவுமே என்னிடம் இல்லை!
உன்னை 
வேண்டாமென்று வெறுத்தவை 
எனக்கெதற்கு?


உனக்கான முக்கியத்துவத்தை
குறைத்து விடுவேனோ என்ற பயத்தில்,
நான் ஆசையாக எழுதிக்காட்டும்
கவிதைகளில் - நீ
ஆர்வம் காட்டமாட்டாய்.

உடனே எனக்குள் நினைத்துக் கொள்வேன் -
சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று
பொறாமைப் படுகிறதே என்று!


கூடுவிட்டுக் கூடுபாயும்
வித்தைக்காரன் நான்.
சமயங்களில் மாறிவிடுகிறேன்...
வர்ணக்குடுவை சுமந்துசெல்லும்
வண்ணத்துப்பூச்சியாய்,
உன் உதட்டுச் செம்பில்
நிறைந்து வழியும் புன்னகைப் பாலாய்,
உன் கண்களின் படபடப்புக்குள்
சிக்கிக் கொண்ட வெட்கத் துண்டாய்,
மஞ்சள் பூக்களாய்,
மலை நாட்டுச் சுடாத வெய்யிலாய்,
நதிகளை நனைக்கும்
சில்லென்ற மழையாய் 
சமயங்களில் மாறித்தான் விடுகிறேன்...
ஏனென்றால்,
இவற்றுக்கு மட்டும்தான்
உன் அனுமதியின்றி
எப்போது வேண்டுமானாலும்
உன்னை ஸ்பரிசித்துப் பார்க்கும்
சலுகையும் உள்ளது!


நீ வெள்ளைச் சுடிதாரில் 
வரும்போதெல்லாம் குழம்பிவிடுகிறேன்.....
உனக்கும் நிலவுக்கும் இடையில் 
6 ஒற்றுமைகளை காண்பதில் உள்ள 
இலகுத் தன்மையாலும்,
5 வேறுபாடுகளை காண்பதில் உள்ள
கடினத் தன்மையாலும்!


எனக்குப் பிடித்த பாடலை
மௌனமாக ரசிப்பேன்.
உனக்குப் பிடித்த பாடலின் வரிகளை
கவனமாக வாசிப்பேன்....
அதில் எங்கேனும்
என் பெயர் வருகிறதா என்று.


நல்ல நாள் பார்த்தே
உன் அப்பாவை சந்திக்கப் போகிறேன்.
உன்னைப் பெண் கேட்பதற்காக அல்ல.
என்னை உன்னிடம் எழுதித் தருவதற்காக!


.
.



Comments

  1. @ தேனம்மை லெக்ஷ்மணன்.....
    Thanks mam.
    தங்களைப் போன்ற சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கும் எழுத்தாளரிடமிருந்து பாராட்டைப் பெறுவதை விட மிகச் சிறந்த பரிசு வேறு எதுவாக இருக்க முடியும்.

    -நன்றி-

    ReplyDelete
  2. @ விச்சு...
    வலைச்சரத்தில், ஆதலினால் காதல் செய்வீர் எனும் காதலர் தினச் சிறப்புப் பதிவில், என்னுடைய “வெட்கத்துண்டை வீசியவள்” கவிதையையும் இணைத்துக்கொண்டு, பலரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த நண்பர் விச்சுவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......

    ReplyDelete
  3. எக்செல் சிறப்பு மென்பொருள் அல்லது அச்சுப்பொறி இல்லாமல் காசோலை அச்சிடும்
    கடைசி இரு இரண்டாம் உலக கொடுத்ததை
    சில பயனுள்ள தகவல் மற்றும் நான் இங்கே உருவாக்கப்பட்ட எக்செல் திட்டத்தின் உள்ளன. இது சிறிய வணிக மற்றும் அலுவலக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இலவச இந்த அனைத்து பதிவிறக்க முடியும் மற்றும் உங்கள் வணிக ஏற்ப இந்த திட்டத்தை எந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நான் இலவச அதை செய்ய முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...