Skip to main content

தாழ்வு மனப்பான்மை!



>
>>
>
உளவியல் கணிப்புப்படி
தாழ்வு மனப்பான்மையின் 
தாய் - உடலமைப்பு!
தந்தையோ - நிறக்குறைவு!

தாழ்வு மனப்பான்மையை 
விட்டொழி,
வெற்றி பெறுவாய் என்று போதிப்பது 
சுய முன்னேற்றப் புத்தகங்களின் 
விற்பனைத் தந்திரம்!
கல்லா கட்டியதும் தங்கள்
கடையை மூடி விடுவார்கள்!
பாதிக்கப்பட்டவனோ 
பாதியிலே விடப்படுவான்!

உண்மையில்
உடல் அமைப்பும்
நிறக் குறைவும்
ஒருபோதும் நோயாகாது!
தோற்றத்தைப் பார்த்து 
எடைபோடுபவர்களை
வேண்டுமானால்
மன நோயாளிகளாக
வைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் தொடர்புகளையும்
துண்டித்துக் கொள்லலாம்.

என்னைப் பொறுத்தவரை,
தாழ்வு மனப்பான்மை என்பது
கேடயம்!
பந்தாக் காரர்களும், பணக்காரர்களும் 
பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும் 
குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும் 
வடிகட்டப்பட்டு,
நல்லவர்கள் மட்டுமே
நட்பாய் கிடைக்கும்!
நல்ல நட்பு என்பது 
மிகப் பெரும் வரம்!

தலைக்கனத்தோடு இருப்பதைவிட,
தாழ்வு மனப்பான்மையுடன் 
இருப்பதொன்றும் குற்றமெல்ல!
காரணம் -
முன்னையது எதையும் கற்றுத்தராமல்,
எப்போது வேண்டுமென்றாலும் 
கீழே தள்ளிவிடக் காத்திருக்கும்.
பின்னையது 
பணிவையும், சகிப்புத் தன்மையையும்
கற்றுத்தந்து
காலங்கள் கழித்தாவது
வாழ்வில் உயர்த்தும்!

தாழ்வு மனப்பான்மை என்பது
தடைகளின் உச்சமல்ல.
அதை ஏற்றுக்கொண்டு
சாதித்தவர்களுக்கு
வரலாற்றில் பஞ்சமுமில்லை!

தாழ்வு மனப்பான்மையை
விடச்சொல்லி ஒருபோதும்
சொல்லமாட்டேன்.....
அது தற்கொலைக்குத் தூண்டாதவாறு
பார்த்துக்கொள்ளவே சொல்வேன்!
.
.

Comments

Post a Comment

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...