Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி...

காதலைப் பாடுகிறேன் !

காதல் - நி ச்சயமாகவே ஒரு புது உலகம் தான். தன்னை மறந்து ,தனிமையை அழைத்து விம்மித் தீர்க்கும்.கனவிலும் அழவைக்கும், சாவைக்காட்டி வாழவைக்கும்.  விஞ்ஞான ஆராய்ச்சி யாளரையோ அல்லது விஞ்ஞானத்துடன் தொடர்பு பட்ட ஆசாமிகள் யாரையாவதோ தெருவில் கண்டால் சற்று விலத்தியே நில்லுங்கள். மறந்தும் கூட காதலைப் பற்றி அவர்களிடம் கேட்டு விடாதீர்கள்.  காதலைப்பற்றி அவர்கள் கோரசாகச் சொல்லக்கூடிய ஒரே பதில்  "காதல் ஓமோன்களின் கலக்கம்!".    ஹைதரசன், ஹீலியம், லிதியம் என்று காதலை இரசாயனத்துக்குள் அடைத்து விடும் ஆபத்தும் உண்டு! தனது இனத்தைப் பெருக்க, உயிரினங்களுக்காக இயற்கையே ஏற்படுத்திக் கொடுத்த வசதி தான் காதல் என்று, டார்வினைக் கூட துணைக் களைப்பார்கள்! பொதுவாகவே, தம்மால் நிரூபிக்க, விளங்கிக் கொள்ள முடியாதவற்றை பொய் என்று சொல்வதுதானே விஞ்ஞானத்தின் நடைமுறை வழக்கம்.  சிறு குழந்தையின் தவறை மன்னிப்பது போல் அல்லது எதிரியின் தூற்றலைக் கண்டு கொள்ளாதது போல் நாமும் இப்போது கொஞ்சம் காதலுக்குள் நுழைவோமா? உங்கள் நண்பர்கள் பெயரை சொல்லுங்கள் என்று முன் பின் தெரியாத ஆண் யாரிடமா...

ஆகவே மின்பாவனையாளர்களே !

நா ன்  இங்கு    பேசப்  போவது,  மன்னார் மாவட்டத்திற்கான  மின்பாவனையையும் மின்பட்டியலையும் பற்றி.  பொதுவாக இது இலங்கை முழுவதற்கும் பொருத்தமான தொன்றாகவே அமைகிறது.  மேல் வர்க்கத்தினர் ஒருபுறம் இருக்கட்டும் அவர்களுக்கு மின்படியலைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை.  அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  ஏழைகளுக்கும் கூடப் பிரச்சினை இல்லை. அவர்களின் மின்பாவனையானது ஒரு போதும் கவலை கொள்ளக் கூடியவாறு இருக்கப் போவது இல்லை.  ஏனெனில்,  சி று கோடுக்கு அருகில் பெரிய கோடொன்றினைப் போடும் போது சிறிய கோடானது  ஒருபோதும்  பெரிதாகத்  தெரிய வாய்ப்பில்லைத் தானே?  . இங்கு பெரிய கோடானது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பிரச்சனையைக் குறிக்கின்றது. நாம் அலசப் போவது இவை இரண்டுக்கும் இடையில், மேல்வர்கமும் அல்லாமல், கீழ் வர்க்கமாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விருப்பமும் இல்லாமல்,  மத்திய வர்கத்தில், மாத சம்பளத்தில், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் மக்களைப் பற்றி.  குறிப்பாக...

கவிதை எழுதுங்கள்

எ ன்னை பொறுத்த வரைக்கும் கவிதை என்பது அனுபவத்தில் , உணர்ச்சி வெளிப்பாட்டில் வந்ததாக இருக்க வேண்டும். கண், காது.... போல கவிதையும் ஒரு அங்கம்தான். ஆ! என்பதில் கூட்டத்தான் ஒரு அற்புத கவிதை ஒழிந்திருக்கிறதே! எப்படி என்றால், ஒரு வலியின் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த்த ஆ! அடக்கி வைத்திருக்கிறதே! யாரோ ஒருவர் சொன்னது போல ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒவ்வொரு பிரசவம்! முதல் குழந்தையை பிரசவிக்கும் தாய் போல அத்தனை சுகத்தை அனுபவிக்கிறேன்!எல்லாக் குழந்தையும் அழகாகவோ , நிறைவாகவோ பிறப்பதில்லையே! கவிதைகளும் அப்படித்தான். அழகான குழந்தை ஒருவேளை பெருமையை சேர்க்கலாம், சந்தோசத்தை தரலாம். ஆனால் ஊனமான குழந்தையோ வாழ்க்கையின் அத்தனை படிப்பினை களையும் புரிய வைக்கிறது.