Skip to main content

கவிதை எழுதுங்கள்






ன்னை பொறுத்த வரைக்கும் கவிதை என்பது அனுபவத்தில் , உணர்ச்சி வெளிப்பாட்டில் வந்ததாக இருக்க வேண்டும். கண், காது.... போல கவிதையும் ஒரு அங்கம்தான்.


ஆ! என்பதில் கூட்டத்தான் ஒரு அற்புத கவிதை ஒழிந்திருக்கிறதே! எப்படி என்றால், ஒரு வலியின் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த்த ஆ! அடக்கி வைத்திருக்கிறதே!


யாரோ ஒருவர் சொன்னது போல ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒவ்வொரு பிரசவம்! முதல் குழந்தையை பிரசவிக்கும் தாய் போல அத்தனை சுகத்தை அனுபவிக்கிறேன்!எல்லாக் குழந்தையும் அழகாகவோ , நிறைவாகவோ பிறப்பதில்லையே! கவிதைகளும் அப்படித்தான். அழகான குழந்தை ஒருவேளை பெருமையை சேர்க்கலாம், சந்தோசத்தை தரலாம். ஆனால் ஊனமான குழந்தையோ வாழ்க்கையின் அத்தனை படிப்பினை களையும் புரிய வைக்கிறது.

தெருவில் ஊனமான ஒருவரையோ அல்லது பார்வை இழந்தவரையோ பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்கே புரிகிறது.வீண் ஆடம்பரங்கள், பெருமைகளை தவிர்த்து திருப்திப்பட்டுக் கொள்ள முடிகிறது! ஆக நம் நிறைகளை தெரிந்து கொள்ள ஒரு குறை உள்ளவர் தேவைப்படுகிறது.


கவிதைகளை பலர் பல விதங்களில் விரும்புகிறார்கள் , காதல், கோபம், பயம், வெறுப்பு, இயலாமை.... என நம் உணர்வு வெளிப்பாட்டின் வடிகாலாக கவிதை இருக்கிறது. ஆனால் இந்த i -phone யுகத்தில் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? மனங்களின் உணர்வுகள் இங்கே மரித்துக் கொண்டல்லவா இருக்கிறது! 



சுனாமி எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். எத்தனை உயிர்களை காவுகொண்டது!ஒரு நூற்றாண்டின் துயர சம்பவம் !
அதற்கு அடுத்த சில நாட்களில் எத்தனை ஆயிரம் தூற்றல் கவிதைகள்? கடல் தாயை எதிர்த்து!


எனக்கு எழுத வரவில்லை!
காரணம் :


01 . நல்ல தங்காள் கதை நம் எல்லோருக்கும் தெரியும். இன்றுவரை அவள் குழந்தைகளுக்ககவே பரிதாபப்படுகிறோம். ஆனால் அந்தத் தாய் பட்ட கொடிய வேதனையை நிச்சயமாய் நம்மால் உணரமுடியாது! ஒவ்வொரு குழந்தையாக கிணற்றுக்குள் போடும் போதும் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?


02 . கண்ணை வெறுத்து விட்டு எப்படி காட்சியை கேட்கலாம் ? அதில் நியாயம் இல்லையே!











கவிதையை நம் அனுபவத்தின் மூலம் எழுத வேண்டும், நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். உங்களுக்கு நெருப்பு சுட்டால், அது எனக்கு எப்படி வலிக்கும்? காதல் அற்புதமானது என நான் சொல்வதுக்கும், காதல் அற்புதமானது என நண்பன் சொல்கிறான் என்பதுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?


கவிதையில் இன்று வரைக்கும் என்னால் காதல் என்ற வட்டத்தை தண்டி வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் காதல் எனக்கு அவ்வளவு அனுபவங்களை தந்துள்ளது! இன்னும் என்னால் சிறப்பானதை தர முடியவில்லை, இப்பொழுதும் முயன்று கொண்டு இருக்கிறேன்!


ஆகவே, கவிதை எழுதுங்கள் !

உங்கள் அனுபவங்களில் நின்று எழுதுங்கள்!
நிச்சயமாய் எல்லோருக்கும் கவிதை வரும். பேருந்தில், குளியல் அறையில், பெரும்பாலும் தனிமையான இரவில்!. இலகுவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எழுதுங்கள்!
நல்ல கவிதை என்றைக்கும் வாழும்!

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...