Skip to main content

ஆகவே மின்பாவனையாளர்களே !









நான் இங்கு  பேசப் போவது, மன்னார் மாவட்டத்திற்கான மின்பாவனையையும் மின்பட்டியலையும் பற்றி. பொதுவாக இது இலங்கை முழுவதற்கும் பொருத்தமான தொன்றாகவே அமைகிறது. 

மேல் வர்க்கத்தினர் ஒருபுறம் இருக்கட்டும் அவர்களுக்கு மின்படியலைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏழைகளுக்கும் கூடப் பிரச்சினை இல்லை. அவர்களின் மின்பாவனையானது ஒரு போதும் கவலை கொள்ளக் கூடியவாறு இருக்கப் போவது இல்லை. ஏனெனில், சிறு கோடுக்கு அருகில் பெரிய கோடொன்றினைப் போடும் போது சிறிய கோடானது ஒருபோதும் பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லைத் தானே? . இங்கு பெரிய கோடானது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பிரச்சனையைக் குறிக்கின்றது.


நாம் அலசப் போவது இவை இரண்டுக்கும் இடையில், மேல்வர்கமும் அல்லாமல், கீழ் வர்க்கமாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விருப்பமும் இல்லாமல்,  மத்திய வர்கத்தில், மாத சம்பளத்தில், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் மக்களைப் பற்றி. 


குறிப்பாக இவர்கள் அனைவரின் வீடுகளிலும் மின்பாவனைப் பொருட்கள் நிச்சயம் காணப்படும். வரையறையற்ற விதமாக மின் சாதனங்களைப் பாவிப்பதும், பின்னர் மின்பட்டியல் அதிகமாக வந்துவிட்டதே என்று புலம்புவதும், மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை வழமையானதொரு விடயமாகும்.

மின்னலகிற்கான பெறுமதிப் பட்டியல் இதோ: 

மின்னலகுகள், அலகிற்கான பெறுமதி, நிலையான கட்டணம் என்பன முறையே:                                    
வீட்டு மின் பாவனை (D-1): 
(0 - 30) - (3.00) - (60)  /
(31 - 60) - (4.70) - (90)  /
(61 - 90) - (7.50) -(120)  /
(91 - 180) - {20.80 with fuel charge} - (180)  /
(181 - 600) -  {32.50 with fuel charge} - (240)  /
(600அலகுகளுக்கு மேல்) - {39.00 with fuel charge} - (240)

சமய ஸ்தாபனங்கள் (R-1):
(0 - 30) - (2.50) - (60)  /
(31 - 90) - (3.70) - (90)  /
(91 - 120) - (9.00) - (180)  /
(121 - 180) - (10.00) - (180)  /
(181 அலகுகளுக்கு மேல்) - (12.50) - (240)   
                                                       
பொது ஸ்தாபனங்கள் (GP-I & GP- II ):      
(0 - எந்தவொரு அலகிற்கும்) - {19.50 with fuel charge} - (240) 
இயந்திர கைத்தொழில் (I-I & I-II) :
(0 - எந்தவொரு அலகிற்கும்) - (10.50) - (240) 

மேலே காணப் படுவது 30 நாட்களுக்கான பட்டியல் ஆகும். இதுவே 25 நாட்களுக்கெனின், பட்டியல் ஆனது (0 - 25) என ஆரம்பிக்கும். இதுவே 40 நாட்கள் எனின் (0 -40) என ஆரம்பிக்கும். 
பொதுவாகவே மக்கள் 90 அலகுகளிற்கு மேலாகப் பாவித்தால் வட்டி அறவிடப்படும் எனப் பிழையாக விளங்கி  வைத்திருக்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல.




மின் பட்டியலானது, 30 நாட்களுக்கு விநயோகிக்கப் பட்டிருந்தால் மட்டுமே 90 அலகுகளுக்கு மேல் பாவிக்கும் போது எரி பொருள் விதிப்பனவு விதிக்கப்படும்.  இதனையே மக்கள் வட்டிஎனப் பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள். 

இன்னும் விளக்கமாகப் பார்த்தோமானால், 25 நாட்களுக்கான பட்டியல் எனின் விதிப்பனவானது 75 அலகுகளுக்கு மேல் அறவிடப்படும். 
35  நாட்களுக்கான மின் பட்டியல் எனின் விதிப்பனவானது 105 அலகுகளுக்கு  மேல் அறவிடப் படும். அதாவது மும்மடங்காகக் கருத்தில் கொள்ளப் படும்.


மின் பட்டியலானது எத்தனை நாட்களுக்கானதாக வந்துள்ளதோ அத்தனை நாட்களையும் 3 ஆல் பெருக்கி, வரும் பெறுமான அளவிலும் அதிகமாக மின்னலகுகள் பாவிக்கப் பட்டிருக்குமெனில் எரிபொருள் விதிப்பனவு அறவிடப்படும். 
அத்துடன் மும்மடங்கிலும் குறைவானதாக, மாதத்திற்கான மின்னலகுகள் பாவிக்கப் பட்டிருப்பின் கழிவும் வழங்கப்படும். 
அதாவது 
30 நாட்களுக்கான மின் பாவனை 28 அலகுகள் எனின் 30 ரூபாய் கழிவுடன் 
{ (28 * 3 + 60) - 30 = 114} ரூபாய் அளவிடப் படும். 

இக்கட்டுரையைப் படிக்கும் மன்னார் மக்களால் நிச்சயமாய் இத் தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும்.
மன்னார் மக்கள் இவற்றினைப் படித்து தம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், பயன்பெறவும் வேண்டும் என்கிற நோக்கிலேயே இவை வெளியிடப் படுகின்றது. ஆனாலும் இக்கட்டுரை எவ்வளவு தூரம் அவர்களைச் சென்றடையும் என்பது உண்மையில் கேள்விக் குறிதான். 
மன்னார் மாவட்டத்தின் கணினி  அறிவையும், இணைய பயன்பாட்டையும் பேச முனைந்தால் புதிதாகக் கட்டுரையே வெளியிடலாம். இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன். 

பின் குறிப்பு : இவர்யார் எங்களுக்கு அறிவுரை கூற என யாரும் நினைத்தால் அவர்களுக்காக - நான் மன்னார் மாவட்டத்திற்கான மின்மானி வாசிப்பாளர். 


Comments

  1. தொழிலைச் செய்தோமா சம்பளத்தைப் பார்த்தோமா என்று இல்லாமல், தங்கள் சமுதாயக் கடப்பாட்டை மேச்சுகின்றேன்.
    தொழிலை தெய்வமாக எண்ணுவோர் கடவுளின் வரத்தை நிச்சயமாகப் பெறுவர்.

    ReplyDelete
  2. நன்றி பிரபா. வேலையை இஷ்டத்துடன், விரும்பிச் செய்தால் அதன்மேல் மதிப்பு தானாக வரும். ஆனால் எத்தனை பேர் தமது வேலையை பெருமையுடன், விரும்பிச் செய்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...