Skip to main content

மன்னாரில் ஒரு ஆச்சரியம்!



                                      


                                             லங்கை மின்சார சபையின் பிராந்தியத்திற்கான பண்டகசாலை(depot) இலே ( மக்கள் இதனை மின்சார சபையின் காரியாலயம் என்றே விளிக்கிறார்கள்.ஆனால் இது பண்டகசாலை என்பதே உண்மை. மின் இணைப்புகளின் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால் மட்டுமே அப்பிரதேசத்தில் காரியாலயம் ஓன்று உருவாக முடியும்) இன்று (03/05/2010) புதிய மின் இணைப்பைப் பெறுவதற்கான பத்திரங்களைச் (form)சமர்ப்பிற்பதர்காக என்றும் இல்லாதவாறு (வரலாற்றிலேயே முதன்முறையாக என்பதைக் குறித்துக் கொள்ளவும்) மக்கள் கூட்டம் அலைமோதியது.


எப்போதுமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் இங்கு இவ்வாறானதொரு நெருக்கடி நிலை காணப் படுவதானது ஆச்சரியமானதொரு அசாதாரண நிகழ்வாகும். 

இச்சம்பவத்தினால் உண்டான ஆச்சரிய மேலீட்டால் (இன்னும் கூட மூக்கின் மேல் விரலை வைத்திருக்கும்), மன்னார் பிராந்தியத்தின் மின்மானி வாசிப்பாளராகப் பணியாற்றும் கஜேந்திரன் என்பவர் தெரிவிக்கையில், "இவ்வாறு பெருமளவான மக்கள் கியூவில் நின்று, புதிய மின் இணைப்பைப் பெறுவதற்காக காத்திருந்தமையை இன்று தான் முதன் முதலாகக் காண்கிறேன்" என்றார். மேலும் இது பற்றி அவர் தெரிவிக்கையில்," வேளாண்மை செய்தவர்கள் வெட்டு முடிந்ததும் கிடைத்த பணத்தைக் கொண்டு புதிய மின் இணைப்பைப் பெற வந்திருக்கலாம்"  எனவும் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டு தற்போது விடியலை நோக்கியிருக்கும் வன்னி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 "புதிய மின் இணைப்புகளை பணம் செலுத்தியே பெற்றுக் கொள்கிறார்கள், சட்டத்திற்குப் புறம்பாக, களவாகக் கொளுவி எடுக்க முனையவில்லை என்பது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறப்பான விடயம் தான்" - அங்கு பணியாற்றும் சிலரின் வேடிக்கையான பேச்சு எனக்கும் கேட்டது. 

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...