Skip to main content

கேடுகெட்டவர்களின் காதல்!



அவன் பார்த்தான்.
அவள் சிரித்தாள்.
அப்போது பிறந்ததை காதல் என்றுதான்
அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்!


கடற்கரையில் ஒன்றாக
கால் நனைத்தார்கள்.
வகுப்பறையில் தனியாக
முத்தமிட்டுக் கொண்டார்கள்.
பூங்காவில் மெய்மறந்து
அணைத்துக் கொண்டார்கள்.


இரவுப் பேரூந்தின்
இறுதி இருக்கையில் ஒருநாள்
எல்லை மீறினான் அவன்.
ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி 
வியந்தாள் அவள்.
ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி
பித்துப்பிடித்தான் அவன்.
அவளோ தவித்தாள்!
தடுக்கவும் மனமில்லாமல்,
அனுமதிக்கவும் முடியாமல்
அவள் தவித்தாள்,
உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள்.
அவனோ வேண்டுமென்றே 
மிச்சம் வைத்தான்!
அப்போது 
அவர்கள் இருக்கை முழுவதும் 
நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்!


மறுநாள்,
உபத்திரவமற்ற 
ஹோட்டல் அறையில்,
காதலின் பெயரால் 
அவள் ஆடை களைந்தாள்-
உலகத்தின் சார்பாக
ஒளித்துவைக்கப்பட்ட அவனது
கைபேசியின் கமெராக் கண்கள்
அதைப் பதிவுசெய்வதை அறியாமல்!


உச்சமடைந்து,
உடல்கள் களைத்து,
கறைகள் களைந்து,
ஆடை அணிந்து
அறையை விட்டு வெளியேறினர்.
கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும்
அவர்களுடன் போக மனமில்லாமல்,
கட்டிலில் இருந்த வேறுபட்ட
கறைகளுக்கு இடையில் ஒட்டிக்கொண்டு
அங்கேயே இருந்துவிட்டது!


சற்று நேரம் கழித்து,
இணையத்தில் குவிந்திருக்கும்
கேடுகெட்ட காதல் களியாட்டங்களின்
எண்ணிக்கையில்
இன்னுமொன்றின் புதுவரவு.
அவ்வளவே!


.
.





Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...