Skip to main content

கேடுகெட்டவர்களின் காதல்!



அவன் பார்த்தான்.
அவள் சிரித்தாள்.
அப்போது பிறந்ததை காதல் என்றுதான்
அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்!


கடற்கரையில் ஒன்றாக
கால் நனைத்தார்கள்.
வகுப்பறையில் தனியாக
முத்தமிட்டுக் கொண்டார்கள்.
பூங்காவில் மெய்மறந்து
அணைத்துக் கொண்டார்கள்.


இரவுப் பேரூந்தின்
இறுதி இருக்கையில் ஒருநாள்
எல்லை மீறினான் அவன்.
ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி 
வியந்தாள் அவள்.
ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி
பித்துப்பிடித்தான் அவன்.
அவளோ தவித்தாள்!
தடுக்கவும் மனமில்லாமல்,
அனுமதிக்கவும் முடியாமல்
அவள் தவித்தாள்,
உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள்.
அவனோ வேண்டுமென்றே 
மிச்சம் வைத்தான்!
அப்போது 
அவர்கள் இருக்கை முழுவதும் 
நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்!


மறுநாள்,
உபத்திரவமற்ற 
ஹோட்டல் அறையில்,
காதலின் பெயரால் 
அவள் ஆடை களைந்தாள்-
உலகத்தின் சார்பாக
ஒளித்துவைக்கப்பட்ட அவனது
கைபேசியின் கமெராக் கண்கள்
அதைப் பதிவுசெய்வதை அறியாமல்!


உச்சமடைந்து,
உடல்கள் களைத்து,
கறைகள் களைந்து,
ஆடை அணிந்து
அறையை விட்டு வெளியேறினர்.
கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும்
அவர்களுடன் போக மனமில்லாமல்,
கட்டிலில் இருந்த வேறுபட்ட
கறைகளுக்கு இடையில் ஒட்டிக்கொண்டு
அங்கேயே இருந்துவிட்டது!


சற்று நேரம் கழித்து,
இணையத்தில் குவிந்திருக்கும்
கேடுகெட்ட காதல் களியாட்டங்களின்
எண்ணிக்கையில்
இன்னுமொன்றின் புதுவரவு.
அவ்வளவே!


.
.





Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .