காதலில் தோற்றவர்கள்
சாலைகளில்
தலைகுனிந்து செல்வதற்கும்,
உலகத்தின்
கடைசி மனிதனாக
தனித்து நிற்பதற்கும்,
நூற்றாண்டு சோகத்தை
புன்னகைத்து மறைப்பதற்கும்
காரணம் காதல் என்பார்கள்..........
உண்மை என்னவென்றால்,
"கசக்கும் வரம் வேண்டுமா?
இனிக்கும் சாபம் வேண்டுமா?"...
என்று எப்போதுமே கேட்கும் காதல்.
விருப்பப்பட்டு
சாபத்தை தேர்தல் .....
காதலின் குற்றமல்ல!
*****
நமக்காகக் கட்டிய கோட்டை
இடிந்து விழுந்த போது
அதிலிருந்து
எந்தப் பீனிக்ஸ் பறவையும்
மீண்டும் பறக்கவில்லை!
மணற்கோட்டைகளில்
சிறகுகள் முளைக்காது
என்பது
அது இடிந்து விழும்வரை
யாருக்கும் புரிவதில்லை!!
*****
பல பெண்கள் பார்க்கச் செய்கிறார்கள் ....
சில பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள் ....
நீ மட்டும் ஏன் என்னை
அழகாகத் தவிர்க்கிறாய்?
சில பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள் ....
நீ மட்டும் ஏன் என்னை
அழகாகத் தவிர்க்கிறாய்?
என்று கவித்துவமாக
ஆரம்பிக்கும்
ஒருதலைக் காதலர்கள்,
தங்களை பகுதிநேரக் கவிஞர்கள்
என்றே சொல்லிக்கொள்கிறார்கள்.
அவர்களின் காதல்
எய்தப்படுவதில்லை என்பதையும்
நேர்மையுடன்
ஏற்றுக்கொள்கிறார்கள்.
*****
மின்மானி வாசிப்பாளர் வேலையில்
தினமும்
சந்தோஷமும் அன்பும்
செழித்துக் கொளிக்கும்
ஏழை வீடுகளையும் பார்க்க முடிகின்றது.
சந்தோஷத்திலும் அன்பிலும்
ஏழ்மையான
பணக்கார வீடுகளையும் பார்க்க முடிகின்றது....
முன்னையவருக்கு மட்டுமே
வாழ்க்கைக்கான
சூத்திரம் தெரியும் போல...
*****
அவமானப் படுத்தியவரிடமும்
ஏன் அன்பாகப் பேசவேண்டும்
ஏன் அன்பாகப் பேசவேண்டும்
என்பது
நண்பனின் முறைப்பாடு.
எதிரியையும் வீழ்த்தவேண்டும் ...
அம்பால் அல்ல
அன்பால்!
அதுவே நல்ல கோட்பாடு.
எதிரியையும் வீழ்த்தவேண்டும் ...
அம்பால் அல்ல
அன்பால்!
அதுவே நல்ல கோட்பாடு.
*****
எல்லோருக்கும் உள்ளேயும்
ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறது.
அதை அடக்கி ஆள்பவனை
நல்லவன் என்கிறோம்,
அவ்வப்போது வெளியே விடுபவனை
சந்தர்ப்பவாதி என்கிறோம்,
சாத்தானாக மாறியவனை
கெட்டவன் என்கிறோம் .....
நிச்சயமாக
நம் எல்லோருக்குள்ளேயும்
ஒரு சாத்தான்
ஒளிந்திருக்கவே செய்கிறது !
.
.
.
Comments
Post a Comment