வெறுமை நிரம்பிய
தேநீர்க் கோப்பைக்குள்
விண்மீன்களை
வெறித்துப் பார்த்துக்கொண்டு
தேநீர்க் கோப்பைக்குள்
விண்மீன்களை
வெறித்துப் பார்த்துக்கொண்டு
இருக்கிறேன் .....
*****
நிகழ்ச்சி நிரலின்
நேர அட்டவணையில்,
கண்ட இடத்தில்
கண்களால் சுடப்படும்
எனப் போட்டிருக்கிறாய் ....
காலையிலா? மாலையிலா?
சற்று
கணித்துச்சொல்!
நேர அட்டவணையில்,
கண்ட இடத்தில்
கண்களால் சுடப்படும்
எனப் போட்டிருக்கிறாய் ....
காலையிலா? மாலையிலா?
சற்று
கணித்துச்சொல்!
*****
பிக்காஸோவின் ஓவியமும்
நீயும் ஒன்றுதான்.இரண்டுமே
நீயும் ஒன்றுதான்.இரண்டுமே
கண்களுக்கு அழகானவை.
ஆனால்
புரிந்துகொள்ளல் கடினம்.
இரண்டையும்
அருகிலேயே
வைத்திருக்க நினைத்தல்
அதிகப் பிரசங்கித்தனம்.
*****
உனக்குப் பிடித்தவர்களிடம்
உண்மையைச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள்.
உன்னைப் பிடித்தவர்களிடம்
எதைச் சொன்னாலும்
உடனே நம்புவார்கள் என்பது
உண்மையைச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள்.
உன்னைப் பிடித்தவர்களிடம்
எதைச் சொன்னாலும்
உடனே நம்புவார்கள் என்பது
நடைமுறை வழக்கம்.
*****
சுதந்திரம் என்றால் என்ன?
அது -
கை விலங்கை
உடைப்பது அல்ல!
இறுகப் பூட்டியிருக்கும்
கை விலங்கை
மணிக்கட்டின் அசைவுக்காக
கொஞ்சம்
தளர்த்திப் பூட்டுவது.
அவ்வளவே!
*****
தசையைப் புணர்ந்து,
தசையைப் புசித்து,
தசையை வளர்ப்பது
வாழ்க்கையல்ல.
போலிச் சாமியார்களிடம்
மாட்டிக் கொண்ட பெண்கள்
புலம்புவது
இப்படித்தான்.
.
.
.
Comments
Post a Comment