Skip to main content

மைக்ரோ கவிதைகள்





கவிதை - 01 :
கடற்கரை விளிம்புகளில்
அணைத்துக் கொள்ளும்
குடை நிழல்களிலும்,

பூங்காவில்
வண்ணத்திப் பூச்சிகளால்

பரிமாறப்படும் முத்தங்களிலும்,
இளவேனிற் காலத்தில்
காமத்தைச் சீண்டியபடி
கை கோர்த்துச் செல்லும்
கணவன் மனைவியிலும்,
விரைவில் முடியாத
ஒற்றையடிப் பாதைகளிலும்,
திரையரங்கின் ஒளியற்ற
பின்னிருக்கைகளிலும்,
வகுப்பறையின்
கிசு கிசுக்கள் நிறைந்த
வெண் சுவர்களிலும்....
தன்னை 
இலவசமாக விளம்பரப்படுத்த 
முயற்சிக்கின்றது காதல்!






* * * * *




கவிதை - 02 :
எந்தப் புல்லாங்குழலும்
இசையைத் தனக்குள்
ஒளித்து வைத்திருப்பதில்லை.
உன் உதடுகள்
எந்த முயற்சியும் எடுக்காதவரை...
அவை வெறும் 
மூங்கில் துண்டுகள் தான்!






* * * * *




கவிதை - 03 :
என்னுடைய 
எந்தக் கவிதையை விடவும்
மிகவும் சிறப்பானது
எதுவும் எழுதப்படாத
ஒரு வெற்றுத்தாள்.


.
.

Comments

  1. கவிதை 1 மற்றும் கவிதை 2 இரண்டும் கவிதை 3- க்கு அழகு சேர்த்துவிட்டது !

    கவிதைக்கு பொய் அழகு !

    ReplyDelete
  2. ”கவிதை 1 மற்றும் கவிதை 2 இரண்டும் கவிதை 3- க்கு அழகு சேர்த்துவிட்டது !
    கவிதைக்கு பொய் அழகு !”

    ஹா, ஹா, ஹா.....
    பாராட்டுக்கு நன்றி முகமூடியணிந்த பேனா!
    ஆனால் கவிதை - 03 பச்சை உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .