Skip to main content

மனதில் பட்டவை



துவும் நடக்கவில்லையே என்கிற யோசனையில் அதிகம் நகம் கடிப்பவரா நீங்கள்.?
அப்படியாயின் நல்லது.
நீங்கள் ஒன்றும் வீண் பொழுது போக்கவில்லை. உங்கள் நகத்தைச் சுத்தமாக்குவதில் நேரத்தை முதலிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

................................................................................................................................................................

ண்பர்கள் மேல் கோவமா? அவர்கள் கண்கள் பார்த்து, மௌனமாகத் திட்டுங்கள். நண்பர்களைப் பாராட்ட வேண்டுமா? நண்பனைத் தவிர மற்ற வர்களிடம் அவனைப் பற்றி சத்தமாகப் பாராட்டுங்கள்!

................................................................................................................................................................


லகமே நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்கிறார்கள். எனக்குத் தரப்பட்டது மோசமான கதாபாத்திரமோ என்னவோ!

................................................................................................................................................................


பெண்கள் பூக்களின் இதழ்களைப் பிய்த்துப் போடுபவர்கள். ஆண்கள் அழகானவற்றைக் கற்பழிப்பவர்கள். நான் இயற்கையை என்றென்றைக்கும் ஆராதிப்பவன். எனக்கு நண்பனோ அல்லது நண்பியோ இல்லை. 
நம்புங்கள்!

................................................................................................................................................................

ல்லோரும் பணத்தைச் சம்பாதிக்க ஓடுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!.  இன்னும் அதிகமாகச் சேருங்கள். உங்கள் சவப்பெட்டியை உயர்ந்ததாக்கவும், பூக்களால் அலங்கரிக்கவும் அது உதவும்!

................................................................................................................................................................


நிறையத் தோற்பதிலும் வசதி இருக்கிறது. தோற்பவர்களால் மட்டுமே தொடர்ந்தும் கற்றுக் கொள்ள முடிகிறது. வெல்ல ஆரம்பிப்பவர்கள் தான் கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்து விடுகிறார்களே!

................................................................................................................................................................


பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லையா? அழகிய, கலை வேலைப்பாடுள்ள மட்பாண்டத்தில் உள்ள வெறுமை மட்டுமே தெரிகின்றதா? எதன் மீதும் பற்று இல்லையா?
நல்லது.
ஞானம் பெற்றுவிட்டதாக ஞானிகளும், யோகிகளும் சொல்லக் கூடும். நம்பாதீர்கள்.
மரணத்திற்குத் தயாராகி விட்டதாக, ஒருவேளை psychologist சொன்னால் உடனேயே நம்புங்கள்.
.
.
.   

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

நண்பனின் காதலி!

07/03/2005 என் இனிய நண்பா! நாளுக்கு நான்கு வேளை  உன் இடக்கை இரு விரலுக்குள்  புகைக்கும் முத்தம் இடும்  சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்! ரசித்து, ருசித்து, புகைப்பாய்... வட்டமாய்,  சதுரமாய்,  கோள வடிவமுமாய் வகை வகையாய் புகை விடுவாய். உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை... என்றார்கள்; என்பார்கள்! நீ சிகரட் என்றவுடனே  எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் - என் வயிறு... வாங்கத் தருவது நான் தானே? இனி ஒரு போதும் இல்லை  இதுவே இறுதி -  உன் சத்தியம்  மறுநாளே தகர்ந்துபோக  தீர்மானங்கள் தொடரும்... நீ நண்பனானது எத்தனை விசித்திரம்.. எனக்கும்  சிகரட்டுக்கும்... சிகரட் உனக்கு கோயில். எனக்கோ குப்பை! எனக்குத் தெரியும்  உன் விரல்களால்  சிகரட்டைத் துப்பி எறிய முடியாது! என்னிலிருந்து பிரிக்க முடியாத  காதலைப் போல... சிகரட்டுக்கும் காதலுக்கும்  ஒற்றுமை கேள்... சிகரட் - பற்றவைத்துப் புகைக்கையில்  நெருங்கி வரும் மரணம்... காதல் - பற்றிக்கொண்டால் ...