நாம் எல்லோரும் பைனாகுலர் பயன்படுத்தும் போட்டி ஒன்றில் பங்குபற்றிக் கொண்டிருக்கிறோம். நம் எல்லோரிடமும் விலை கூடிய, அழகான பைனாகுலர் ஒன்று தரப்பட்டிருக்கின்றது. அதை புத்திசாலித் தனமாகப் பயன் படுத்தி வெற்றி பெறாமல், தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் நாம் அந்த பைனாகுலரை பெருப்பித்தும், கிட்டவாக்கியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அநத் பைனாகுலரைத் திருப்பி, அதன் மற்றைய பக்கத்தால் பார்க்கும் போது, அது காட்டும் பொருள் சிறிதாகவும், தூரத்திலும் தெரிவதை பெரும் பாலும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவர்களில் பலர் இந்தப் போட்டியில் தோற்றும் விடுகிறார்கள்.
அந்த பைனாகுலரின் விஞ்ஞானப் பெயர்................வாழ்க்கை!
*
ஓடும் நீர் ஆவியாகி மேலெழுவதும், அந்த நீராவி மழையாகி நிலத்தில் பெய்து மீண்டும் ஓடும் நீருடன் சேர்வதும், அதன் ஒரு கிளை தனியாகச் சென்று உறைந்து போய் பனிக்கட்டி ஆவதும் வாழ்க்கை வட்டத்தின் இயல்பு நிலைகள். என்ன இந்த நீர் நமக்கு அடங்காமல், கட்டுப்பாடுமில்லாமல் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆத்திரப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஓடுவதால் தான் அது நன்நீர். தேங்கி நின்றால் அதன் பெயர் சாக்கடை!
* *
எல்லோருக்கும் தாங்கள் செய்யும் செயலுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது, கருத்துக்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவர்கள் பேச வேண்டிய இடைவெளிகளை உங்கள் வார்த்தைகளால் நிரப்பாதீர்கள். Don't full fill theirs socks with your bloody legs. உண்மையான குற்றவாளிகளுக்கும் நீதி மன்றத்தில் தங்களை நியாயப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்!
* * *
குறுக்கு வழிகளில் பணம் பார்த்து, தங்கள் குற்றங்களை மூடி மறைத்து சமூகத்தில் தங்களையும் பெரியவர்களாகக் காட்டிக் கொள்பவர்களைப் பற்றிப் பேச எதுவும் இல்லை! பணமும் இளமையும் இருக்கும் வரை வாழ்க்கை இனிமையானது போலத்தான் தெரியும். நேர்மையானவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கேலியும் செய்வார்கள். ஆனால், எதிர்காலத்தில் ஏதாவதொரு வாழ்கைப் புள்ளியில், ஏன் இப்படி வாழ்ந்தோம் என்று அவர்கள் வருத்தப் படுவார்களேயானால், அதுவரை காலமும் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை மொத்தமும் அர்த்தமற்றதாகிப் போய்விடும்.
* * * *
வீட்டுப் பூனை முற்றத்தில் தவறி விழும் குருவிகளை அடித்துத் தின்பதில் இப்போதெல்லம் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆரம்பத்தில் தடுக்கவும் செய்தேன். ஆனால் இப்போது அப்படியில்லை. பூனையின் உணவுச் சங்கிலியில் குருவியும் உண்டல்லவா! இயற்கையின் விதிகளை நாம் மீறக்கூடாது. தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தானே இயற்கையின் நியதியும் கூட. குருவிக்கு இறக்கையும் பூனைக்குப் பற்களுடன் கூடிய பசியும் இருக்குமாறு இயற்கை பார்த்துக்கொண்டதில் அர்த்தம் உள்ளது.
.
* * * * *
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகள் தான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான். அவன் எப்போதும் தன்னைவிட வலிமை குறைந்த, பலவீனமான, தன்பேச்சைக் கேட்கக்கூடிய ஒருவனை, குரூரமாக ரசித்து வீழ்த்தி, இரத்தத்தைப் பார்த்துப் பேரின்பம் காண தேடிக்கொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் கிடைத்தவுடன் அந்த வன்முறையாளன் வெளியே வரவிரும்புகிறான்! நல்ல வேளையாக நாகரீக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் சட்டதிட்டங்களின் காரணமாக, அந்த வன்முறையாளனை நாம் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகிறோம். ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வன்முறையாளனை வெளியே விட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்கிறோம்.
உதாரணமாக சொல்வதானால், தினம் செய்திகளில் வருபவை தான், மருமகளை எரிக்கும் மாமியார், மனைவியின் களுத்தை வெட்டும் கணவன், குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போடும் தாய், தற்கொலை குண்டுதாரிகள், போர் வீரர்கள் இப்படி ஏராளம்.......
ஒருமுறை கோழி வெட்டும் கடையில் போய் நின்று பாருங்கள், அங்கே கோழி வெட்டுபவர், அந்தக் கோழி கதறக் கதற, அதன் களுத்தை அறுக்கவும், அதன் சூடான இரத்தம் அவர் கையில் பட்டவுடன், அவரின் விரல்கள் விழித்துக் கொண்டு, அந்தக் கோழி துடிக்கத் துடிக்க, அதன் இறக்கையை குரூரமாக பிய்த்தெடுக்கும். பின் அதன் நெஞ்சைப் பிளந்து, அதன் துடித்துக்கொண்டிருக்கும் இதயம்,சூடான ஈரல் என ஒவ்வொரு உறுப்பாக அறுத்து.................... நாமும் அதை இரசிக்கவே செய்வோம். ஒரு முறை youtube இல் போஸ்மார்ட்டம் செய்வதை ஆவலுடன் பார்த்தேன். எனக்குள்ளிருக்கும் வன்முறையாளனை உணர்ந்து கொண்டதும் அப்போதுதான்! உங்களில் ஒவ்வொருவரும், இப்படி ஏதாவதொரு கணத்தில் உங்களுக்குள் இருக்கும் அந்த வன்முறையாளனை உணர்ந்திருப்பீர்கள், மறைக்காமல் நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுங்கள்!
.
.
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகள் தான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான். அவன் எப்போதும் தன்னைவிட வலிமை குறைந்த, பலவீனமான, தன்பேச்சைக் கேட்கக்கூடிய ஒருவனை, குரூரமாக ரசித்து வீழ்த்தி, இரத்தத்தைப் பார்த்துப் பேரின்பம் காண தேடிக்கொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் கிடைத்தவுடன் அந்த வன்முறையாளன் வெளியே வரவிரும்புகிறான்! நல்ல வேளையாக நாகரீக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் சட்டதிட்டங்களின் காரணமாக, அந்த வன்முறையாளனை நாம் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகிறோம். ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வன்முறையாளனை வெளியே விட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்கிறோம்.
உதாரணமாக சொல்வதானால், தினம் செய்திகளில் வருபவை தான், மருமகளை எரிக்கும் மாமியார், மனைவியின் களுத்தை வெட்டும் கணவன், குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போடும் தாய், தற்கொலை குண்டுதாரிகள், போர் வீரர்கள் இப்படி ஏராளம்.......
ஒருமுறை கோழி வெட்டும் கடையில் போய் நின்று பாருங்கள், அங்கே கோழி வெட்டுபவர், அந்தக் கோழி கதறக் கதற, அதன் களுத்தை அறுக்கவும், அதன் சூடான இரத்தம் அவர் கையில் பட்டவுடன், அவரின் விரல்கள் விழித்துக் கொண்டு, அந்தக் கோழி துடிக்கத் துடிக்க, அதன் இறக்கையை குரூரமாக பிய்த்தெடுக்கும். பின் அதன் நெஞ்சைப் பிளந்து, அதன் துடித்துக்கொண்டிருக்கும் இதயம்,சூடான ஈரல் என ஒவ்வொரு உறுப்பாக அறுத்து.................... நாமும் அதை இரசிக்கவே செய்வோம். ஒரு முறை youtube இல் போஸ்மார்ட்டம் செய்வதை ஆவலுடன் பார்த்தேன். எனக்குள்ளிருக்கும் வன்முறையாளனை உணர்ந்து கொண்டதும் அப்போதுதான்! உங்களில் ஒவ்வொருவரும், இப்படி ஏதாவதொரு கணத்தில் உங்களுக்குள் இருக்கும் அந்த வன்முறையாளனை உணர்ந்திருப்பீர்கள், மறைக்காமல் நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுங்கள்!
.
.
Comments
Post a Comment