தொட்டதும் அதிர்கிறேன்.
மின்னாலும்,
உன்னாலும்!
*
கூந்தலைப் பரப்பிவிட்டாய்.
மிரண்டுபோய்
ஒளிந்துகொண்டது
இரவு.
*
தேன் தொட்ட பலாச்சுளைகள் -
உன் மேலுதடும்,
கீழுதடும்.
*
நீ என்னை
அலங்கரிக்கின்றாய்...
ஞாபகத்தில் வந்து நின்றது
நேர்ந்துவிட்ட ஆடு.
*
இக்கணமே செத்துப்போவோமா
என்கிறாய்...
வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே
நம் உடல்கள்!
*
தங்களைத் தாங்களே
பிய்த்துக் கொள்வதில்லை.
காதலில் மட்டும்தான்
அப்படிச் செய்வதற்கும்
அனுமதியட்டை கிடைக்கின்றது!
.
.
Comments
Post a Comment