நாமெல்லோரும்
பாதுகாப்பதாக நினைத்து
உள்ளங்கைக்குள்
ஒரு அழகான பட்டாம் பூச்சியை
எப்போதுமே
அடைத்து வைத்திருக்கின்றோம்.
அந்தப்பட்டாம்பூச்சி -
நம் வாழ்க்கை!
அதை அழுத்திக் கொல்வதும்
அன்றி
சுதந்திரமாக பறக்க விடுவதும்
அவரவர் இஷ்டம்!
இறக்கை ஒடிந்த
பலரின் பட்டாம்பூச்சிகள்
பறக்க முயற்சிப்பதை
பார்த்திருக்கின்றேன்.
ஆனால்.....
அவை பறப்பதேயில்லை!!
பாதுகாப்பதாக நினைத்து
உள்ளங்கைக்குள்
ஒரு அழகான பட்டாம் பூச்சியை
எப்போதுமே
அடைத்து வைத்திருக்கின்றோம்.
அந்தப்பட்டாம்பூச்சி -
நம் வாழ்க்கை!
அதை அழுத்திக் கொல்வதும்
அன்றி
சுதந்திரமாக பறக்க விடுவதும்
அவரவர் இஷ்டம்!
இறக்கை ஒடிந்த
பலரின் பட்டாம்பூச்சிகள்
பறக்க முயற்சிப்பதை
பார்த்திருக்கின்றேன்.
ஆனால்.....
அவை பறப்பதேயில்லை!!
*****
நீண்ட வரண்ட
கோடைக்குப் பிறகு
கோடைக்குப் பிறகு
வாழ்க்கையை
நேசிக்க ஆரம்பிக்கையில் ..........
அவ்வளவு அழகானதாகவும்,
அவ்வளவு அழகானதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்
படுகின்றது வாழ்க்கை!
காதலால் தொலைத்ததை
நட்பினால் பெறல்.....
காதலால் தொலைத்ததை
நட்பினால் பெறல்.....
குற்றமல்ல!
.
.
.
இன்றுதான் உங்க பதிவைப் முதன் முதலில் பார்த்தேன். அருமையான பதிவு
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி குணசேகரன். அடிக்கடி வாருங்கள்.
ReplyDelete