Skip to main content

நண்பனின் காதலி!

07/03/2005

என் இனிய நண்பா!
நாளுக்கு நான்கு வேளை 
உன் இடக்கை இரு விரலுக்குள் 
புகைக்கும் முத்தம் இடும் 
சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்!

ரசித்து, ருசித்து, புகைப்பாய்...
வட்டமாய், 
சதுரமாய், 
கோள வடிவமுமாய்
வகை வகையாய் புகை விடுவாய்.
உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை...
என்றார்கள்; என்பார்கள்!

நீ சிகரட் என்றவுடனே 
எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் -
என் வயிறு...
வாங்கத் தருவது நான் தானே?

இனி ஒரு போதும் இல்லை 
இதுவே இறுதி - 
உன் சத்தியம் 
மறுநாளே தகர்ந்துபோக 
தீர்மானங்கள் தொடரும்...

நீ நண்பனானது எத்தனை விசித்திரம்..
எனக்கும் 
சிகரட்டுக்கும்...
சிகரட் உனக்கு கோயில்.
எனக்கோ குப்பை!

எனக்குத் தெரியும் 
உன் விரல்களால் 
சிகரட்டைத் துப்பி எறிய முடியாது!
என்னிலிருந்து பிரிக்க முடியாத 
காதலைப் போல...

சிகரட்டுக்கும் காதலுக்கும் 
ஒற்றுமை கேள்...
சிகரட் -
பற்றவைத்துப் புகைக்கையில் 
நெருங்கி வரும் மரணம்...
காதல் -
பற்றிக்கொண்டால் தினம் மரணம்!

உனக்கெல்லாம் ஏதடா 
இதய தேவதை!
புகைகக்கி புகைகக்கி
ஈரலுடன் இருதயம் கூட  
துருப்பிடித்துப் போயிருக்குமே!

அணுக்கள் ஒவ்வொன்றிலும் 
சுவைக்கிறது என்பாய்!
இல்லை!
அணுக்கள் ஒவ்வொன்றாய் 
அழிக்கிறது என்பேன்...

புகைக்கையில் 
பூபாளம் கேட்கிறது என்கிறாயே!
உற்றுக்கேள் 
ஊதப்படும் சங்கின் ஒலியை! 
உனக்காக 
ஒத்திகை பார்க்கிறது மரணம்....
உனக்காகத்தான்!
.
.
.



Comments

  1. அணுக்கள் ஒவ்வொன்றிலும்
    சுவைக்கிறது என்பாய்!
    இல்லை!
    அணுக்கள் ஒவ்வொன்றாய்
    அழிக்கிறது என்பேன்...//

    கவிதை உண்மை அருமை ..சர்வேஷ்..

    ReplyDelete
  2. நன்றி ers,
    நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்...
    தொடர்ந்து ஊக்கம்தாருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...