07/03/2005
என் இனிய நண்பா!
நாளுக்கு நான்கு வேளை
உன் இடக்கை இரு விரலுக்குள்
புகைக்கும் முத்தம் இடும்
சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்!
ரசித்து, ருசித்து, புகைப்பாய்...
வட்டமாய்,
சதுரமாய்,
கோள வடிவமுமாய்
வகை வகையாய் புகை விடுவாய்.
உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை...
என்றார்கள்; என்பார்கள்!
நீ சிகரட் என்றவுடனே
எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் -
என் வயிறு...
வாங்கத் தருவது நான் தானே?
இனி ஒரு போதும் இல்லை
இதுவே இறுதி -
உன் சத்தியம்
மறுநாளே தகர்ந்துபோக
தீர்மானங்கள் தொடரும்...
நீ நண்பனானது எத்தனை விசித்திரம்..
எனக்கும்
சிகரட்டுக்கும்...
சிகரட் உனக்கு கோயில்.
எனக்கோ குப்பை!
எனக்குத் தெரியும்
உன் விரல்களால்
சிகரட்டைத் துப்பி எறிய முடியாது!
என்னிலிருந்து பிரிக்க முடியாத
காதலைப் போல...
சிகரட்டுக்கும் காதலுக்கும்
ஒற்றுமை கேள்...
சிகரட் -
பற்றவைத்துப் புகைக்கையில்
நெருங்கி வரும் மரணம்...
காதல் -
பற்றிக்கொண்டால் தினம் மரணம்!
உனக்கெல்லாம் ஏதடா
இதய தேவதை!
புகைகக்கி புகைகக்கி
ஈரலுடன் இருதயம் கூட
துருப்பிடித்துப் போயிருக்குமே!
அணுக்கள் ஒவ்வொன்றிலும்
சுவைக்கிறது என்பாய்!
இல்லை!
அணுக்கள் ஒவ்வொன்றாய்
அழிக்கிறது என்பேன்...
புகைக்கையில்
பூபாளம் கேட்கிறது என்கிறாயே!
உற்றுக்கேள்
ஊதப்படும் சங்கின் ஒலியை!
உனக்காக
ஒத்திகை பார்க்கிறது மரணம்....
உனக்காகத்தான்!
.
.
.

3 comments:
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்
அணுக்கள் ஒவ்வொன்றிலும்
சுவைக்கிறது என்பாய்!
இல்லை!
அணுக்கள் ஒவ்வொன்றாய்
அழிக்கிறது என்பேன்...//
கவிதை உண்மை அருமை ..சர்வேஷ்..
நன்றி ers,
நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்...
தொடர்ந்து ஊக்கம்தாருங்கள்.
Post a Comment