Skip to main content

என் முட்களில் வாழ்பவள்!


சிரிக்க வேண்டாம்
என்கிறாய்.
அழாமல் இருக்கப்
பார்க்கின்றேன்...

நானோ
தத்தி தத்தி
நடை பழகும்
சிறு குழந்தை.
நீ என் மழலைகளில்
சொக்கு கின்றாய்.
ஆனாலும் தாயல்ல!

மறந்து விட்டாய்.
நானும் ஆண் என்பதை
ஏனோ மறந்து விட்டாய்.

எல்லாம் சொல்லச்
சொல்கின்றாய்...
மறைத்தது
நிஜங்கள் தான் தோழி!
ஆனாலும் அசிங்கங்கள்.


உனக்காக செங்கம்பளம் 
வைத்திருக்கிறேன்.
ஆனால் 
சிறைக்குள் இருப்பதாய் 
சொல்கின்றாய்.


பெண்ணே நீ
சித்திரம் கேட்கின்றாய்.
உன் கை விலங்கை
உடைக்க
இரும்புத் துண்டை
அனுப்பி வைத்தேன்.

நீ விடியலுக்காக
வானம் பார்க்கின்றாய்.
நான் உன்
கண்ணீர்த் துளிகளை
ஏந்துகின்றேன்.

முயற்சிக்கிறேன்.
நீ கேட்கும் சித்திரத்தை
வரைய முயற்சிக்கிறேன்...

உனக்காக
நட்சத்திரங்கள் வைத்திருக்கின்றேன்.
மாலையாக இட்டுக் கொள்.

எண்ணுகின்றேன்
கம்பிகளை.
உன் அன்பெனும்
மனச் சிறைக்குள்
நான்...

உன் கனவுகளை
யாரும் கவர்ந்திருக்கலாம்.
சொல் மீட்டுத் தருகிறேன்.

ஊமையாக்கப்பட்ட
இந்தக் கொலுசுகள்
உன்னுடையவை தானா?

நன்றாகச் சொல்
நான் உன் நண்பன் தானே?
காத்திருக்க வைக்கின்றாய்
நானென்ன கடனாளியா?

புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
இருந்தும்
புரியாமல் தவிக்கின்றேன்...
நடந்தவை நல்லவையா
அல்லது
நடப்பவை நல்லதற்கா?

யாருமற்ற தூரத்தில்
சிறு ஒளி.
நான்
பெண்களை மதிப்பவன்.
உன் சின்ன விரலைத் தருவாயா?
ஒன்றாக நடந்துசெல்வோம்...
.
.
.

Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி