Skip to main content

இப்போதைக்கு இவளைப் பற்றி...

25/01/2004

பதினெட்டு வயதுப் பருவ மங்கை அவள்!
அழகுக்கெல்லாம் அழகு சேர்க்க 
இப்பரந்த பூமியில் பிறந்த பதுமை...

பக்குவத்தை படித்து 
ஒழுக்கத்தை ஆடையாக உடுப்பவள் ...


பௌர்ணமி நிலவு பகலில் வந்தால் 
பொறாமைப்படும் 
இவள் நிறத்தைக் கண்டு...

இரத்த நாளங்களை வெடிக்கச் செய்து 
உயிரணுக்களை உறுஞ்சும் அட்டைகள் 
அவள் பார்வைகள்...

தென்றல் காற்றில் ஹைக்கூ எழுதும் 
இவள் கார் வண்ணக் கூந்தல்...

காற்றுக்குக் கடிவாளமிட்டு
கைதியாக்கும் சிரிப்பலைகளில்
சிதறிப்போகிறது என் உள்ளம்...

தேவதையின் செவ்விதழில் 
புலம்பெயரத் தவம் கிடக்கிறது 
அவளுக்காய் வளர்ந்த என் தாடியும்,
அதற்கண்மித்துள்ள  பிரதேசங்களும்...

மெல்லச் சிறகடிக்கும் 
வண்ணாத்துப் பூச்சி இமைகளுடன்
கொஞ்சி உறவாடத் துடிக்கிறது 
துளிர் விட்ட என் மீசை...

கார்வட்டப் பொட்டை 
கைது செய்த இடத்தில், 
எப்போது இடங்கிடைக்கும்
என தினந்துடிக்கும் - என் உதடுகள்...

கன்ன ஓரத்தில்,
காதிற்கருகில்...
சுருண்டு விழும் ஒரு சில முடிகளில்
சிக்கித் தவிக்கிறேன் - நான்...

தங்கத் தாமரை மொட்டான 
இவள் மூக்கிலிருந்து 
விடை பெறும் சுவாசங்களை 
தேடித் பிடித்து சேகரிப்பதே 
என் முழு நேர வேலை!

இவளைக் காணும் ஒவ்வொரு கணமும்...
புதிதாய்ப் பிறந்த மழலையாக,
குழைந்து, 
நெழிந்து பின் 
எங்கோ தொலைந்தே போகிறேன்...
.
.



Comments

  1. //தொலைந்தே போகிறேன்...//
    கவிதையுடனே... வாழ்த்துக்கள்
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...