Skip to main content

வழமை போல கொல்!

07/02/2004
உப்புக் கரித்த உணர்வுகளில் 
தேன் சுவையாய் வந்த பெண்ணே!
உன் நினைவுகளால் 
இங்கே எனக்குத் தும்மல்கள்..
அங்கே உனக்கு?

எனக்காக நீயல்ல
உனக்காகவே நான்...
பிறந்து, வளர்ந்து, பரிதவிக்கின்றேன்!

நிர்வாணமாய்த் திரியும் 
அந்தி நிலவு-
அதனிடம் தான்...
வலிகள் நிரம்பிய - 
என் வாலிப இரவுகளை 
சேமித்து வைத்திருக்கிறேன்...

உணரப்பட்டு உணரப்பட்டு 
பழக்கப்பட்டவை தான் - உன் 
தட்டிக்கழிப்புக்கள்,
கணக்கெடாமைகள்
இன்னும் இன்னும்...

உன்னைப் பார்க்கும் 
ஒவ்வொரு தடவையும்... 
என்னைக் கண்டுகொள்வாயா?
கண்ணசைப்பாயா  - என 
என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
எஞ்சுவதென்னவோ 
உன் பரிகாசங்கள்,
எனக்கே உரிய ஏமாற்றங்கள்..

உன்னாலே 
பட்டினியாய்க் கிடக்கும் 
என் உள்ளத்திற்கு 
பசிக்கிறது பெண்ணே!
பருகுவதற்கு - 
உன் பார்வைகள் வேண்டும்..
புசிப்பதற்கு - 
உன் புன்னகை வேண்டும்...
தருவாயா?

நலமாகத் தூங்கி 
நாட்கள் பல பெண்ணே!
உன் நாணங்களை என் கண்கள் 
பரிசாகக் கேட்கின்றன...
உன் பட்டு மனதில் 
இடம் தரா விட்டாலும் 
பரவாயில்லை...
உன் பாதச் சுவடுகளிலாவது
படுத்துக் கொள்ள இடம் ஒன்று தா?
கொஞ்ச நேரம் தூங்குகிறேன்...
வேண்டிய பொழுது   
தட்டி எழுப்பி  
வழமை போல கொல்!
.
.
.


Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...