Skip to main content

நீ என்கிற நான்!


காதலிக்கின்றேன்.
பிரிந்து சென்ற உன்னை
இன்னும் காதலிக்கின்றேன்.
வில்லன் யார்?
சமுதாயம் என்று பெயர்.

நீ நீயாகவும்,
நான் நானாகவும்
இருந்து தொலைத்திருக்கலாம்...
ஏன்
நீ நானாகவும்,
நான் நீயாகவும் ஆனோம்?
நம்மை
வீழ்த்திப் பார்த்ததில்
என்ன சுகம் கண்டதோ
இந்தக் காதல்?

காதல்...
ஒன்று கண்ணில் தோன்றி
கருவறை அடையும்.
மற்றயது கண்ணில் தோன்றி
கல்லறையில் முடியும்.
முன்னையது
போற்றப்பட்ட காதல்,
வரம் வாங்கி வந்த காதலர்கள்.
பின்னையது
தூற்றப்பட்ட காதல்,
சபிக்கப் பட்ட காதலர்கள்.

நாம் கூட
வரம் வாங்கியதால்
சபிக்கப் பட்டவர்கள்...

என் உயிரைத் தொட்ட
முதல் பெண் நீ.
உன் உணர்வைத் தொட்ட
முதல் ஆண் நான்.

என் தவறுகளைத்
தெரிய முன்பே
என்னைக் காதலித்தாய்...
தெரிந்த பின்
இன்னும் காதலித்தாய்.

ஒருவனுக்கு ஒருத்தி
அந்த ஒருத்திக்குள்
ஒரு தீ!
அதுவே காதல் என்பாய்.

உன்னை எனக்காய்
அர்ப்பணித்தாய்.
அதற்காகவே நானும்
ஆர்ப்பரித்தேன்...

நாம்
சேர்ந்து வாழ்வது பற்றி
என்னை விட அதிகம்
கனவுகள் சுமந்தவள் நீதான்.

நீ நாளை பற்றி
அதிகம் பேசினாய்.
நான் உன்னைப் பற்றி
அதிகம் யோசித்தேன்...

நாம் இருவரும்
சேர்ந்து வாழ வேண்டும்
என்பது மட்டும் தான் காதலா?
உன் உறவுகளுக்காய் நீயும்,
என் உறவுகளுக்காய் நானும்
பிரிந்து நின்று
சோகம் பகிர்கிறோமே
இதுவும் காதல் தான்...

உடலைச் சார்ந்த காதலாய்
இருந்திருந்தால்
ஓடிப் போயிருக்கலாம்...
இது
உயிரைச் சார்ந்தது அல்லவா?

என் இதயத்தை
எடுத்துக் கொண்டால்
எனக்கு வலிக்குமென்று,
உன் இதயத்தையும்
என் இதயத்தையும்
என்னிடமே விட்டுச் சென்றவள்
நீ!
இன்னும் நீ
என் இதயத்தில் தான்...

என்னைப் பிரிவதாய்
எவ்வளவு அழுதாய்.
நான் அழவில்லை!
கண்ணுக்குள் இருக்கும் நீ
கரைந்து விட மாட்டாயா?

நான் பொய் சொல்வதை
விரும்பாதவள் நீ.
எங்கேயும் பார்த்துக் கொண்டால்
நலத்தை மட்டும் விசாரிக்காதே!
.
.
.

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...