Skip to main content

நீ என்கிற நான்!


காதலிக்கின்றேன்.
பிரிந்து சென்ற உன்னை
இன்னும் காதலிக்கின்றேன்.
வில்லன் யார்?
சமுதாயம் என்று பெயர்.

நீ நீயாகவும்,
நான் நானாகவும்
இருந்து தொலைத்திருக்கலாம்...
ஏன்
நீ நானாகவும்,
நான் நீயாகவும் ஆனோம்?
நம்மை
வீழ்த்திப் பார்த்ததில்
என்ன சுகம் கண்டதோ
இந்தக் காதல்?

காதல்...
ஒன்று கண்ணில் தோன்றி
கருவறை அடையும்.
மற்றயது கண்ணில் தோன்றி
கல்லறையில் முடியும்.
முன்னையது
போற்றப்பட்ட காதல்,
வரம் வாங்கி வந்த காதலர்கள்.
பின்னையது
தூற்றப்பட்ட காதல்,
சபிக்கப் பட்ட காதலர்கள்.

நாம் கூட
வரம் வாங்கியதால்
சபிக்கப் பட்டவர்கள்...

என் உயிரைத் தொட்ட
முதல் பெண் நீ.
உன் உணர்வைத் தொட்ட
முதல் ஆண் நான்.

என் தவறுகளைத்
தெரிய முன்பே
என்னைக் காதலித்தாய்...
தெரிந்த பின்
இன்னும் காதலித்தாய்.

ஒருவனுக்கு ஒருத்தி
அந்த ஒருத்திக்குள்
ஒரு தீ!
அதுவே காதல் என்பாய்.

உன்னை எனக்காய்
அர்ப்பணித்தாய்.
அதற்காகவே நானும்
ஆர்ப்பரித்தேன்...

நாம்
சேர்ந்து வாழ்வது பற்றி
என்னை விட அதிகம்
கனவுகள் சுமந்தவள் நீதான்.

நீ நாளை பற்றி
அதிகம் பேசினாய்.
நான் உன்னைப் பற்றி
அதிகம் யோசித்தேன்...

நாம் இருவரும்
சேர்ந்து வாழ வேண்டும்
என்பது மட்டும் தான் காதலா?
உன் உறவுகளுக்காய் நீயும்,
என் உறவுகளுக்காய் நானும்
பிரிந்து நின்று
சோகம் பகிர்கிறோமே
இதுவும் காதல் தான்...

உடலைச் சார்ந்த காதலாய்
இருந்திருந்தால்
ஓடிப் போயிருக்கலாம்...
இது
உயிரைச் சார்ந்தது அல்லவா?

என் இதயத்தை
எடுத்துக் கொண்டால்
எனக்கு வலிக்குமென்று,
உன் இதயத்தையும்
என் இதயத்தையும்
என்னிடமே விட்டுச் சென்றவள்
நீ!
இன்னும் நீ
என் இதயத்தில் தான்...

என்னைப் பிரிவதாய்
எவ்வளவு அழுதாய்.
நான் அழவில்லை!
கண்ணுக்குள் இருக்கும் நீ
கரைந்து விட மாட்டாயா?

நான் பொய் சொல்வதை
விரும்பாதவள் நீ.
எங்கேயும் பார்த்துக் கொண்டால்
நலத்தை மட்டும் விசாரிக்காதே!
.
.
.

Comments

Popular posts from this blog

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

ஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :

த ற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது. ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே! நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கி