: ஆண்
இளந்தேனையும் பாலையும்
கலந்து செய்துவைத்த
சிலை நீயோ?
இதமாக இதமாக
என் காதில் இனித்திடும்
இசை நீயோ?
*
காதலின் தூறலில்
உன் கண்களின் ஈர்ப்பினில்
விரல்களின் ஸ்பரிசத்தில்
உயிருக்குள் நனைகிறேன்.
: பெண்
காதலின் தூறலில்
உன் கவிதையின் ஈர்ப்பினில்
ஆண்மையின் ஸ்பரிசத்தில்
உயிருக்குள் கரைகிறேன்.
*
: ஆண்
உன்னைப் பார்க்கையில்
ஏனடி என் நெஞ்சில்
இத்தனை படபடப்பு?
உன்னோடு பேசையில்
ஏனடி என் உயிருக்குள்
இந்த சல சலப்பு?
*
: பெண்
அருகினில் இருக்கிறாய்
அவஸ்தைகள் செய்கிறாய்
என்னையே பார்க்கிறாய்
ஏதோ கேட்கிறாய்.
: குழு
அருகினில் இருக்கிறாய்...
இருக்கிறாய்...இருக்கிறாய்.
இருக்கிறாய்...இருக்கிறாய்.
அவஸ்தைகள் செய்கிறாய்...
செய்கிறாய்...செய்கிறாய்.
செய்கிறாய்...செய்கிறாய்.
அவளையே பார்க்கிறாய்
என்ன தான் கேட்கிறாய்.
*
: ஆண்
அதை நான் சொல்லவா?
அதை நான் சொல்லவா?
அதை நான் சொல்லவா?
சொல்லாமல் செல்லவா?
சொல்லாமல் செல்லவா?
சொல்லாமல் செல்லவா?
: பெண்
சொல்லவே விரும்பினேன்.
சொல்லாமல் செல்கிறேன்.
*
: ஆண்
இதுதான் காதலா?
: பெண்
இளமையின் மோதலா?
: ஆண்
இருவரின் குழப்பமா?
: பெண்
இதற்கில்லை மோட்சமா?
: குழு
இதுதான் காதலே.
இளமையின் மோதலே.
உங்கள் இருவரின் குழப்பமே.
இதற்கில்லை இங்கு மோட்சமே.
: குழு
இதுதான் காதலே.
இளமையின் சாதலே.
இரு உயிர்களின் குழப்பமே.
இதற்கிணையில்லை எதுவுமே!
லலலா லாலலே
லலலல லாலலே
லல லலலல லலல்லே...
டுடு டூ டூடுடு
டுடுடுடு டூடுடு
டுடு டுடுடுடு டுடுட்டுடூ.
லலலா லாலலே
லலலல லாலலே
லல லலலல லலல்லே...
டுடு டூ டூடுடு
டுடுடுடு டூடுடு
டுடு டுடுடுடு டுடுட்டுடூ.
* * * * *
Comments
Post a Comment