Skip to main content

உயிருக்குள் நனைகிறேன்




: ஆண் 
 இளந்தேனையும் பாலையும்
 கலந்து செய்துவைத்த
 சிலை நீயோ?

இதமாக இதமாக
  என் காதில் இனித்திடும்
இசை நீயோ?

*
காதலின் தூறலில்
        உன் கண்களின் ஈர்ப்பினில்
        விரல்களின் ஸ்பரிசத்தில்
          உயிருக்குள் நனைகிறேன்.


: பெண்
     காதலின் தூறலில்
        உன் கவிதையின் ஈர்ப்பினில்
        ஆண்மையின் ஸ்பரிசத்தில்
        உயிருக்குள் கரைகிறேன்.

*

 : ஆண் 
உன்னைப் பார்க்கையில்
     ஏனடி என் நெஞ்சில்
  இத்தனை படபடப்பு?

உன்னோடு பேசையில்
        ஏனடி என் உயிருக்குள்
   இந்த சல சலப்பு?

*

: பெண் 
      அருகினில் இருக்கிறாய்
        அவஸ்தைகள் செய்கிறாய்
        என்னையே பார்க்கிறாய்
        ஏதோ கேட்கிறாய்.

: குழு 
அருகினில் இருக்கிறாய்...
இருக்கிறாய்...இருக்கிறாய்.
        அவஸ்தைகள் செய்கிறாய்...
செய்கிறாய்...செய்கிறாய்.
        அவளையே பார்க்கிறாய்
        என்ன தான் கேட்கிறாய்.

*

: ஆண்
அதை நான் சொல்லவா?
அதை நான் சொல்லவா?
      சொல்லாமல் செல்லவா?
 சொல்லாமல் செல்லவா?
: பெண்
சொல்லவே விரும்பினேன்.
            சொல்லாமல் செல்கிறேன்.

*

: ஆண்
இதுதான் காதலா?
: பெண் 
இளமையின் மோதலா?
: ஆண்
இருவரின் குழப்பமா?
: பெண் 
இதற்கில்லை மோட்சமா?

: குழு 
இதுதான் காதலே.
        இளமையின் மோதலே.
       உங்கள் இருவரின் குழப்பமே.
        இதற்கில்லை இங்கு மோட்சமே.


: குழு 
இதுதான் காதலே.
        இளமையின் சாதலே.
      இரு உயிர்களின் குழப்பமே.
        இதற்கிணையில்லை எதுவுமே!


லலலா லாலலே
லலலல லாலலே
லல லலலல லலல்லே...


டுடு டூ டூடுடு
டுடுடுடு டூடுடு
டுடு டுடுடுடு டுடுட்டுடூ.


* * * * *

Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...