உத்தரத்தில் தொங்கும்
பித்தளை வேலைப்பாட்டில்
மயங்குகின்றோம்.
கீழே மிதிபடும்
வைரங்களைக் கவனிப்பதில்லை...
*
இந்த உலகம் -
அழகானவர்களையே எப்போதும்
ஆராதிக்கின்றது.
அவர்களின்
மனங்களின் அழுக்குகள்
மறைக்கப்படுவதால்...
அழுக்கானவர்களையோ எப்போதும்
அவமதிக்கின்றது.
அவர்களின்
மனங்களின் அழகுகளை
மறந்துவிடுவதால்!
*
வாழ்க்கை -
செதுக்கி வைக்கப்பட்டதென்று
யார் சொன்னது?
அது ஒரு
அமைப்பற்ற கூழாங்கல்.
அதை அழகூட்ட முயற்சித்தல்
அபாயம் தரும்!
.
.
Comments
Post a Comment