Skip to main content

என் முற்றத்துக் கவிதைகள் - 2



ஹைக்கூ பகுதி - 2 அனைவரையும் வரவேற்கின்றது. ஹைக்கூ பகுதி - 1 ற்கு இங்கே சொடுக்கவும். http://theruppaadakan.blogspot.com/2011/11/blog-post_07.html  . 

ஹைக்கூ என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியது. ஏதோ வாசிக்க வேண்டும் என்றெல்லாம் வாசிக்கக்கூடாது. அப்படி வாசித்தால், வெறும் வார்த்தைகளாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும், எதுவும் புரியாது. ஹைக்கூவை மனதால் வாசிக்க வேண்டும். உண்மையில் ஹைக்கூ என்பது பூந்தோட்டத்தில் வீசும் மெல்லிய, இதமான சில்லென்ற காற்றை சுவாசிப்பதைப் போல சுகமான ஒரு அனுபவம். அதனை மெதுவாக, ரசித்துச் சுவைக்கும் போதுதான் அதன் வசீகரத் தன்மையை உணர முடியும். 





தவறாமல் தோற்கடிக்கிறது
எல்லோரையும் 
வயிறு.


**


தாய்ப்பாலை
விற்றாள்.
குழந்தைக்கு உணவு.


**


இரவிலும்
குளிக்கின்றாள்
முதிர்க்கன்னி.


**


விளக்கைப்
பற்றவைத்தாள்.
கட்டுமரத்தின் அசைவு.


**


கால மாற்றம்.
பேரூந்தில்
ஜன்னல் தவிர்த்தது.


**


கலைந்தது வானம்.
கிணற்றுக்குள் 
வாளி.


**


பூனைப் படத்தை
கொறித்துப்போட்டது
எலி.


**


பேசும் பொம்மை
வைத்திருந்தான்
ஊமைப்பையன்.


**


இருட்டுப் பாதையில்
வழிசொன்னது
அனுபவம்.


**


சிகரட்டில்
இல்லையே
எச்சரிக்கை வாசகம்!


**


உடைந்தது வானவில் 
கையில்
சோப்பு நுரை.


**


தலை 
குனிந்தது
சலூன் கண்ணாடி.


**


பலகாரப் பரிமாற்றத்தின் 
பின்னர்
விலைபேசப்பட்டாள்.


**


சுவற்றில்
கோலம் போட்டது
மழைச்சாரல்.


**


பாலுக்கு அழுதது
விபச்சாரியின்
குழந்தை.


**


குழந்தைப் படங்கள்.
குழந்தை
இல்லாத வீட்டில்.


**


முற்றத்து வெள்ளத்தில்
மூழ்கியது 
கப்பல்.

**


இருட்டியதும்
பூத்தன
மின்மினிப் பூச்சிகள்.


.
.












































































Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...