Skip to main content

காதல் படிக்கட்டில்







(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... )


ஆண் குரலில் :


காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பாரம்மா.
இந்தக் கவிதையைக் கேளம்மா...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொள்ளம்மா.


வகுப்புக்கு நீ வருவாய்.
என்னை விட்டு 
தூரத்தில் போய் அமர்வாய்.
இந்த இடைவெளி அளவு
குறையாவிட்டால்
கணிதமும் கசந்துவிடும்.


மலர்களை விரும்புகிறாய்
அதை முள்ளுடன் பறிக்கின்றாய்.
முள் நான், மலர் நீ
சேர்ந்தே இருக்கணும்
விளங்கிக் கொள்வாயா?



இந்தக் காதல் தவிக்கும்படி
உன் கண்களும் பழிக்குதடி.
நிலவொளி என்பது
முற்றத்தில் விழுவது
கால்கள் மிதிப்பதற்கா?.


என் கூடவே வருகின்றாய்.
பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய்.
அதில் என் பெயர் கேட்டதும் 
உன் முகம் சிவந்ததை 
என்னிடம் மறைக்காதே!



அடி வெல்வெட் துணித்துண்டே!
என்னை வெறுப்பதாய் நடிக்காதே!
உன் உதடுகள் சொல்வதும்
இதயம் நினைப்பதும்
நிச்சயம் ஒன்றல்ல.



உன் கைவிரல் அணைப்பிற்குள்
தங்க மோதிரம் துயில்கிறதே...
அதில் உன் பெயர், என் பெயர்
உற்பத்தியானால் 
உயிரும் பூரிக்கும்.


என்னை ஏற்றுக்கொள்வாயா?
உன் மனசின் உரிமம் தருவாயா?
அடி ஈருடல் ஓருயிர்
உண்மையானால்
காதலும் சிறக்குமடி!





காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பார்த்தாயே.
இந்தக் கவிதையைக் கேட்டாயே...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொண்டாயா?




.
.



Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...