Skip to main content

காதல் படிக்கட்டில்







(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... )


ஆண் குரலில் :


காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பாரம்மா.
இந்தக் கவிதையைக் கேளம்மா...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொள்ளம்மா.


வகுப்புக்கு நீ வருவாய்.
என்னை விட்டு 
தூரத்தில் போய் அமர்வாய்.
இந்த இடைவெளி அளவு
குறையாவிட்டால்
கணிதமும் கசந்துவிடும்.


மலர்களை விரும்புகிறாய்
அதை முள்ளுடன் பறிக்கின்றாய்.
முள் நான், மலர் நீ
சேர்ந்தே இருக்கணும்
விளங்கிக் கொள்வாயா?



இந்தக் காதல் தவிக்கும்படி
உன் கண்களும் பழிக்குதடி.
நிலவொளி என்பது
முற்றத்தில் விழுவது
கால்கள் மிதிப்பதற்கா?.


என் கூடவே வருகின்றாய்.
பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய்.
அதில் என் பெயர் கேட்டதும் 
உன் முகம் சிவந்ததை 
என்னிடம் மறைக்காதே!



அடி வெல்வெட் துணித்துண்டே!
என்னை வெறுப்பதாய் நடிக்காதே!
உன் உதடுகள் சொல்வதும்
இதயம் நினைப்பதும்
நிச்சயம் ஒன்றல்ல.



உன் கைவிரல் அணைப்பிற்குள்
தங்க மோதிரம் துயில்கிறதே...
அதில் உன் பெயர், என் பெயர்
உற்பத்தியானால் 
உயிரும் பூரிக்கும்.


என்னை ஏற்றுக்கொள்வாயா?
உன் மனசின் உரிமம் தருவாயா?
அடி ஈருடல் ஓருயிர்
உண்மையானால்
காதலும் சிறக்குமடி!





காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பார்த்தாயே.
இந்தக் கவிதையைக் கேட்டாயே...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொண்டாயா?




.
.



Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

நண்பனின் காதலி!

07/03/2005 என் இனிய நண்பா! நாளுக்கு நான்கு வேளை  உன் இடக்கை இரு விரலுக்குள்  புகைக்கும் முத்தம் இடும்  சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்! ரசித்து, ருசித்து, புகைப்பாய்... வட்டமாய்,  சதுரமாய்,  கோள வடிவமுமாய் வகை வகையாய் புகை விடுவாய். உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை... என்றார்கள்; என்பார்கள்! நீ சிகரட் என்றவுடனே  எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் - என் வயிறு... வாங்கத் தருவது நான் தானே? இனி ஒரு போதும் இல்லை  இதுவே இறுதி -  உன் சத்தியம்  மறுநாளே தகர்ந்துபோக  தீர்மானங்கள் தொடரும்... நீ நண்பனானது எத்தனை விசித்திரம்.. எனக்கும்  சிகரட்டுக்கும்... சிகரட் உனக்கு கோயில். எனக்கோ குப்பை! எனக்குத் தெரியும்  உன் விரல்களால்  சிகரட்டைத் துப்பி எறிய முடியாது! என்னிலிருந்து பிரிக்க முடியாத  காதலைப் போல... சிகரட்டுக்கும் காதலுக்கும்  ஒற்றுமை கேள்... சிகரட் - பற்றவைத்துப் புகைக்கையில்  நெருங்கி வரும் மரணம்... காதல் - பற்றிக்கொண்டால் ...