Skip to main content

காதல் படிக்கட்டில்







(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... )


ஆண் குரலில் :


காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பாரம்மா.
இந்தக் கவிதையைக் கேளம்மா...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொள்ளம்மா.


வகுப்புக்கு நீ வருவாய்.
என்னை விட்டு 
தூரத்தில் போய் அமர்வாய்.
இந்த இடைவெளி அளவு
குறையாவிட்டால்
கணிதமும் கசந்துவிடும்.


மலர்களை விரும்புகிறாய்
அதை முள்ளுடன் பறிக்கின்றாய்.
முள் நான், மலர் நீ
சேர்ந்தே இருக்கணும்
விளங்கிக் கொள்வாயா?



இந்தக் காதல் தவிக்கும்படி
உன் கண்களும் பழிக்குதடி.
நிலவொளி என்பது
முற்றத்தில் விழுவது
கால்கள் மிதிப்பதற்கா?.


என் கூடவே வருகின்றாய்.
பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய்.
அதில் என் பெயர் கேட்டதும் 
உன் முகம் சிவந்ததை 
என்னிடம் மறைக்காதே!



அடி வெல்வெட் துணித்துண்டே!
என்னை வெறுப்பதாய் நடிக்காதே!
உன் உதடுகள் சொல்வதும்
இதயம் நினைப்பதும்
நிச்சயம் ஒன்றல்ல.



உன் கைவிரல் அணைப்பிற்குள்
தங்க மோதிரம் துயில்கிறதே...
அதில் உன் பெயர், என் பெயர்
உற்பத்தியானால் 
உயிரும் பூரிக்கும்.


என்னை ஏற்றுக்கொள்வாயா?
உன் மனசின் உரிமம் தருவாயா?
அடி ஈருடல் ஓருயிர்
உண்மையானால்
காதலும் சிறக்குமடி!





காதல் படிக்கட்டில்
நான் கடைசியில் நிற்கின்றேன்.
என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே!
கவனிக்க மாட்டாயா?
என் கண்களைப் பார்த்தாயே.
இந்தக் கவிதையைக் கேட்டாயே...
காதல் என்றால் கொடுமையல்ல
புரிந்து கொண்டாயா?




.
.



Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...