Skip to main content

தேவி தரிசனம்



கோபுர உச்சியில்
வட்ட நிலவு.
எனக்குத் தெரிவது
உனது முகம்.

ஆவணியில் தானே
திருவிழா ?
எனக்கு மட்டும்
நீ கோயில் வரும்
ஒவ்வொரு முறையும்.

கோயில் முழுதும்
பிரகாசமாய்
நின்று ஒளிரும்
நீ தந்த வருகை.



தேவைகள் கருதித்
தேங்காய் உடைப்பாய்.
அங்கங்கே
சிதறிக்கிடப்பேன் நான்.

மூலஸ்தான பூஜையில்
உன்னை நோக்கி
கை கூப்புவேன்.

அர்ச்சனை ரசீதுக்கு
உன் பெயரையே உச்சரிப்பேன்.
நீ மிச்சம் வைக்கும்
குங்குமத்தை
நாத்திகன் ஆனாலும்
இட்டுக் கொள்வேன்.

பூஜை முடிவில்
பிரசாதம் எதற்கு?
பய பக்தியுடன்
உன் பார்வைகளைப்
பெற்றுக் கொள்வேன்.

தீபங்கள் அணைக்கப்பட்டு
கோயில் பூட்டப்படும்.
நான் உன்னில்
அனுமதிக்கப்பட்டு
காதல் பற்றவைக்கப்படும்.
.
.
.

Comments

  1. அருமை!@

    - ஜெகதீஸ்வரன்
    sagotharan.wordpress.com

    ReplyDelete
  2. பூஜை முடிவில்
    பிரசாதம் எதற்கு?
    பய பக்தியுடன்
    உன் பார்வைகளைப்
    பெற்றுக் கொள்வேன்.

    வாழ்த்துகள்!@

    - ஜெகதீஸ்வரன்
    sagotharan.wordpress.com

    ReplyDelete
  3. நன்றி ஜெகதீஸ் சகோதரரே.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .