எப்போது பார்த்தாலும், படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின் காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த தலை முடி, உன்னை விட்டுத் தவறிய கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை வேண்டாமென்று வெறுத்தவை எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும் புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச் சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....

கவிதை அருமை.அருகாமையில் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல இருக்கிறது கவிதை . தொடருங்கள்
ReplyDeleteநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்,
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர்.
தங்கள் சொன்னது போலவே setting செய்துவிட்டேன். உதவியமைக்கு நன்றி.