Skip to main content

இலகு தவணையில் மரணம்!


பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்
இருமுறை சாக வேண்டும்.

சாவு....
யாரும் நிச்சயப் படுத்திச் சொல்லுங்கள்?
முழுவதுமாய் வாங்குவேன்.
தவணை முறையில் என்றாலும்...
குத்தகைக்குக் கூடக் கிடைக்காதா?

நிலைக்குத்தாக அடுக்கப்பட்ட
மனிதக் கூட்டத்துக்குள்
எனக்கான சாவு ஒழிந்திருக்கிறதா?

விரல்கள் வெளித் தெரியும்
புதை குழிகளையும் தாண்டியாயிற்று.
நைல் நதி பக்கத்தில்
நீண்ட பள்ளத்திலாவது
ஒழிந்திருக்கிறதா?

ஒருவேளை
சாவதற்கும் ஏதும் தகுதி வேண்டுமா?

பரணில் ஒட்டடை கூடிய
உப்புக் கண்டங்களுக்கு
நடுவில்காய்கிறது
மனமும், முதற்காதலும்.

முதற்காதல் -
விதம் விதமாய்
அழுதுத் தீர்த்த பிறகும்
என்னை
அலங்கரித்துப் பார்க்கும் தோல்வி!

மனம் -
ஒரு வித்தைக் காரியின்
செப்படியில் சிதறிப்போனது.
புதுப்பிக்க வழியில்லை.

எப்போதுமே
வாழத்தெரிந்தவன்
ஒரு ஜாதி.
வாழத்தெரியாதவன்
மறு ஜாதி.
யாராவது சொல்லுங்கள்?
நான் எந்த ஜாதி?

நித்தியங்களுக்குள் நிராகரிக்கப்பட்டு,
வேதனைகளால்
விரும்பி அணைக்கப்பட்டு
வாழ்க்கை எட்டி உதைத்ததால்
சாவை விரும்பி நிற்கிறேன்.
சாவதற்குத் தகுதி போதாதா?

என் சாவை சில வேளைகளில்
நிலவும்,
தென்றலும்
ஏற்க மறுக்கும்...
நிலவைத் தொட்டதில்லை!
தென்றலைப் பார்த்ததில்லை!
சாவது மேல்.
ஒரு முறை
செத்து விட்டுப் போகிறேன்.

பகலொரு பொழுதும்,
இரவொரு பொழுதுமாய்.......
.
.
.

Comments

Post a Comment

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .