Skip to main content

பிதற்றல்!



யதார்த்தப் பள்ளங்கள்.
கால் இடறி விழி பிதுங்கும்
சம்பவச் சாக்கடைகள்.

முறைத்துப் போகிறது
முறைதவறிப்போன
மூங்கில் காற்று.

ஊர்ந்து திரியும்
மேகம்
ஊர் மாறி வந்த
கள்ளத் தோணி.

புன்னகைக்கும் பூக்கள்
கற்புள்ள கண்ணகிகளா?
மாசற்றதாம் நிலவு!
புணர்ச்சிப் பள்ளங்கள்
புலப்படுவதில்லையா?

மாலைச் சூரியன்
மன்மதன் போலும்...
கடலுடன் தான்
அதற்குக் காதலுண்டே?

பேப்பரும் இருந்து
பேனாவும் கிடைப்பதால்...
ஏதாவது,
எதையாவது
எழுத நினைத்து,
இயற்கை,
இலக்கணப் பாரம்பரியங்களை
இதழ் மூடி முத்தித்து,
பிதற்றிய பிலாக்கினங்களை
கவிதை என மார்தட்டிக் கொள்ளும்
திருகு தாளங்களுக்கெல்லாம்
எங்குதான் இடமுண்டு?
காதலைத் தவிர!
.
.
.

Comments

  1. ம்ம்ம்... நல்லாயிருக்கு..

    மாலைச் சூரியன்
    மன்மதன் போலும்...
    கடலுடன் தான்
    அதற்குக் காதலுண்டே...

    பேப்பரும் இருந்து
    பேனாவும் கிடைப்பதால்...
    ஏதாவது,
    எதையாவது
    எழுத நினைத்து,
    இயற்கை,
    இலக்கணப் பாரம்பரியங்களை
    இதழ் மூடி முத்தித்து,
    பிதற்றிய பிலாக்கினங்களை
    கவிதை என மார்தட்டிக் கொள்ளும்
    திருகு தாளங்களுக்கெல்லாம்
    எங்குதான் இடமுண்டு?
    காதலைத் தவிர!
    .

    ReplyDelete
  2. நன்றி செந்தில் குமார்.

    ReplyDelete

Post a Comment