கோபுர உச்சியில்
வட்ட நிலவு.
எனக்குத் தெரிவது
உனது முகம்.
ஆவணியில் தானே
திருவிழா ?
எனக்கு மட்டும்
நீ கோயில் வரும்
ஒவ்வொரு முறையும்.
கோயில் முழுதும்
பிரகாசமாய்
நின்று ஒளிரும்
நீ தந்த வருகை.
தேவைகள் கருதித்
தேங்காய் உடைப்பாய்.
அங்கங்கே
சிதறிக்கிடப்பேன் நான்.
மூலஸ்தான பூஜையில்
உன்னை நோக்கி
கை கூப்புவேன்.
அர்ச்சனை ரசீதுக்கு
உன் பெயரையே உச்சரிப்பேன்.
நீ மிச்சம் வைக்கும்
குங்குமத்தை
நாத்திகன் ஆனாலும்
இட்டுக் கொள்வேன்.
பூஜை முடிவில்
பிரசாதம் எதற்கு?
பய பக்தியுடன்
உன் பார்வைகளைப்
பெற்றுக் கொள்வேன்.
தீபங்கள் அணைக்கப்பட்டு
கோயில் பூட்டப்படும்.
நான் உன்னில்
அனுமதிக்கப்பட்டு
காதல் பற்றவைக்கப்படும்.
.
.
.
அருமை!@
ReplyDelete- ஜெகதீஸ்வரன்
sagotharan.wordpress.com
பூஜை முடிவில்
ReplyDeleteபிரசாதம் எதற்கு?
பய பக்தியுடன்
உன் பார்வைகளைப்
பெற்றுக் கொள்வேன்.
வாழ்த்துகள்!@
- ஜெகதீஸ்வரன்
sagotharan.wordpress.com
நன்றி ஜெகதீஸ் சகோதரரே.....
ReplyDelete