சிகப்புப் பூவும்
எதுவும் சொல்லாமலேயே
வாடிக்கொண்டிருக்கிறது.
மின் கம்பத்தில் உட்காரும்
காக்கை
மீண்டுமொரு முறை
பீச்சி விட்டுப் போகிறது.
குளிர் பூசப்பட்ட காற்று
நாசிக்குள் நுழைந்து
உடலில் ஒரு பகுதியில்
ஒட்டிக் கொள்கிறது.
உரசிக் கொள்ளும் கிளைகளும்,
கிளையற்ற மரங்களும்
புரியாத மொழியில்
பேசிக்கொள்கின்றன.
வீட்டுப் பூனை
நகத்தைக்
கூர் தீட்டிக் கொல்கிறது!
கூடு திரும்பியவை
எண்ணிக்கையில்
குறைந்திருக்க வேண்டும்!
விழுங்கிய சூரியனை
கடல்
இனிக் காலையில் தான்
துப்பும்.
கருப்பு மையை
வானில்
கரைத்துக் கொட்ட,
கரைத்துக் கொட்ட,
கிணற்றுள்
விழும் நட்சத்திரம்
வழமைபோல
நொருங்கி உடையும்.
நொருங்கி உடையும்.
மாலைப் பொழுது
இப்படியிருக்க,
என்னுடைய டயரியில்
இது
இன்னுமொரு நாள்.
.
.
.
//
ReplyDeleteமாலைப் பொழுது
இப்படியிருக்க,
என்னுடைய டயரியில்
இது
இன்னுமொரு நாள்.//
அருமை நண்பரே
அருமை நண்பரே :)
ReplyDeleteநன்றி வழிப்போக்கன்.
ReplyDeleteநன்றி சுபாங்கன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.